Don't Miss!
- News லோக்சபா 2ம் கட்ட தேர்தல்: 13 மாநிலம் 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு.. முக்கிய வேட்பாளர்கள் லிஸ்ட்
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
‘பஞ்சாப்பின் வைரங்கள்’ என இந்திரா காந்தி கொலையாளிகளுக்கு புகழாரம்- காம் தே ஹீரே படத்திற்கு எதிர்ப்பு
சண்டிகர்: மறைந்த பிரதமர் இந்திரா காந்தி கொலையாளிகளை 'பஞ்சாபின் வைரங்கள்' என்று ஒரு படத்தில் வர்ணித்திருப்பது எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ளது.
இந்திரா காந்தி
கொலையாளிகளான சத்வத் சிங், பியாந்த் சிங் ஆகியோரை புகழ்ந்தும், அவர்களை பஞ்சாபின் வைரங்கள் என்று வர்ணித்தும், பஞ்சாபி மொழிப் படம் ஒன்றில் காட்சிகள் வைத்துள்ளனர். இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்தப் படம்
வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது. ஆனால் இப்படத்தை திரையிடக் கூடாது. தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
எச்சரிக்கை...
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் படம் திரையிட அனுமதிக்கப்பட்டால் பெரும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்ப்பு...
இதேபோல ஆளும் அகாலிதளத்திற்கும் படத்தை திரையிட எதிர்ப்புத் தெரிவித்து பாஜகவினர் சிலர் கோரிக்கை வைத்துள்ளனர்.
உத்தரவு...
இதையடுத்து இந்த விவகாரம் குறித்து கவனிக்குமாறு பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், மாநில உள்துறைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்திரா காந்தி படுகொலை...
1984ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி தனது மெய்க்காப்பாளர்களான பியாந்த் சிங் மற்றும் சத்வந்த் சிங் ஆகியோரால் மிக நெருக்கத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார் இந்திரா காந்தி. அமிர்தசரஸ் பொற்கோவிலில் ராணுவத்தை அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த படுகொலை நடந்தது.
காம் தே ஹீரே...
இந்த சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு காம் தே ஹீரே என்ற பெயரில் பஞ்சாபியில் ஒரு படம் தயாராகியுள்ளது. இப்படத்தின் தலைப்புக்கு ஆங்கிலத்தில் சமூகத்தின் வைரங்கள் என்று பொருள் படும்.