Don't Miss!
- News தலைநிமிருது தருமபுரி.. அங்கே மலை உச்சியில் யாரு? கலெக்டர் சாந்தி? தர்மபுரி மலை கிராமம் குஷி.. சபாஷ்
- Technology WhatsApp-ல ஸ்டேட்டஸ் போடுறீங்களா? வருது புது அப்டேட்.. டபுள் சந்தோஷத்தில் பயனர்கள்.. என்ன மேட்டர் தெரியுமா?
- Automobiles வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்! தூத்துக்குடி ஆலையை திறப்பதற்கு முன்பே விற்பனையை துவங்க வாய்ப்பு!
- Finance தங்கம் விலை தடாலடி உயர்வு.. ஒரே நாளில் 450 ரூபாய் எகிறியது.. மக்கள் அதிர்ச்சி..!
- Sports IPL 2024 CSK : ருதுராஜ் கெய்க்வாட் உடன் ஓபனிங்கில் தல தோனி? சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் ட்விஸ்ட்
- Lifestyle உடலின் இந்த பகுதிகளில் அடிக்கடி வீக்கம் ஏற்படுதா? அப்ப உங்க கல்லீரல் மோசமான நிலையில் இருக்குன்னு அர்த்தம்...
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
சாது ஹீரோ.. ரணகள வில்லன்... சாப விமோசனம்: இதுவா ரஜினியின் லிங்கா படக் கதை?
சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா படம் மூட நம்பிக்கையின் பெயரில் நடக்கும் வழிப்பறி - கொள்ளைகளைப் பகிரங்கப்படுத்தும் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாபம்
படத்தின் கதைப்படி, ஒரு ஊரில் பெரிய அணையின் பாலம் உள்ளது. அந்த வழியாகச் செல்வோர் அடிக்கடி விபத்துக்குள்ளாகி உயிரிழக்கிறார்கள். என்ன காரணம் என்று விசாரித்தால், அந்தப் பாலத்தைக் கட்டிய தொழிலாளிகளை ஊர் மக்கள் அவமதித்து விரட்டியதாகவும், அவர்களின் சாபமே மக்களைப் பழிவாங்குவதாகவும் தெரிய வருகிறது.
சீனியர் ரஜினி
இந்த சாபத்தைப் போக்க, பாலத்தைக் கட்டியவர்களின் வாரிசு யாராவது கிடைத்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்கத் துடிக்கிறார்கள். அப்போதுதான் பாலம் கட்டிய ஒரு தொழிலாளியின் மகனான ரஜினி கிடைக்கிறார். அவரை அழைத்து வந்து மன்னிப்பு கேட்டு, மரியாதை செய்கிறார்கள்.
இளைய ரஜினி
இந்த நேரத்தில் அங்கு வருகிறார் இன்னொரு ரஜினி. இளமையும் துடிப்பும் வீரமும் மிக்க அந்த ரஜினி, மகா வில்லத்தனமானவர். போலீசிலிருந்து மறைந்து வாழும் இவர் அந்த பாலம் இருக்கும் ஊருக்கு வருகிறார். ஏற்கெனவே அங்கிருக்கும் சீனியர் ரஜினியுடன் நட்பாகிறார்.
சாப மர்மம்
இவர்தான் அந்த பாலத்தின் சாப ரகசியத்தைக் கண்டறிகிறார். அது சாபமா, சதியா என்பது திரையில் பார்க்க வேண்டிய சந்திரமுகி சமாச்சாரமாம்!
-இது ஊடகங்களில் வந்துள்ள கதைதான். உண்மையா என்பதை இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்தான் சொல்ல வேண்டும்!
சோனாக்ஷி - அனுஷ்கா
கதைப்படி, அணைக் கட்டியவரின் வாரிசாக வரும் சீனியர் ரஜினிக்கு சோனாக்ஷி சின்ஹா ஜோடியாக நடிக்கிறார். முரட்டுக் காளையாக வரும் இளம் ரஜினிக்கு அனுஷ்கா நடிக்கிறார்.
வடிவேலு - சுதீப்
படத்தில் ரஜினியின் நண்பராக வருகிறார் வடிவேலு. இளம் ரஜினிக்கு நண்பராக கிச்சா சுதீப் நடிக்கிறார். வில்லன் ஜெகபதி பாபு என்பதை ஏற்கெனவே கூறியிருந்தோம்.
பொங்கலுக்கு படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளார்கள்.
-
மோசமான வசூல்.. தொலைக்காட்சிக்கு பார்சலான குண்டூர் காரம்.. மகேஷ் பாபுவிற்கு இப்படி ஒரு நிலைமையா?
-
Nayanthara - 50 செகண்ட்ஸ்க்கு 50 கோடி ரூபாயா?.. நயன்தாராவை பார்த்து வாய் பிளக்கும் திரைத்துறை
-
ரியாவுடன் ரகசிய திருமணம்.. கேள்விக்குறியாகும் மீனாட்சியின் வாழ்க்கை.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!