Don't Miss!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Lifestyle 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
தமிழ் பெயரில் படங்கள்: வரிவிலக்கு தொடர்பான அரசாணைக்கு இடைக்காலத் தடை!
சென்னை: தமிழில் பெயர் சூட்டும் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக வழக்கறிஞர் மோட்சம் மற்றும் படத்தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனுவில்,கூறியிருப்பதாவது:
தமிழில் பெயர் சூட்டும் படங்களுக்கு வரி விலக்கு அளிப்பதில் அரசு பாரபட்சம் காட்டுகிறது. அரசு விதித்த விதிமுறைகளின்படி, படத்தின் தலைப்போ, கதையின் வசனங்களோ இடம்பெறவில்லை என்றாலும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அதனால், அரசு உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனு தற்காலிகத் தலைமை நீதிபதி சதீஷ்குமார் அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் பல முறை அறிவுறுத்தியும், இதுவரை அரசுத் தரப்பில் சரியான பதில் அளிக்கவில்லை.
எனவே, கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழில் பெயர் சூட்டும் படங்களுக்கு வரிவிலக்கு அளிப்பது தொடர்பாக திருத்தம் கொண்டு வந்த அரசாணைக்கு இரண்டு வாரத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கிறோம் என உத்தரவிட்டனர்.