twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ் பெயரில் படங்கள்: வரிவிலக்கு தொடர்பான அரசாணைக்கு இடைக்காலத் தடை!

    By Mayura Akilan
    |

    சென்னை: தமிழில் பெயர் சூட்டும் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

    இது தொடர்பாக வழக்கறிஞர் மோட்சம் மற்றும் படத்தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனுவில்,கூறியிருப்பதாவது:

    தமிழில் பெயர் சூட்டும் படங்களுக்கு வரி விலக்கு அளிப்பதில் அரசு பாரபட்சம் காட்டுகிறது. அரசு விதித்த விதிமுறைகளின்படி, படத்தின் தலைப்போ, கதையின் வசனங்களோ இடம்பெறவில்லை என்றாலும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அதனால், அரசு உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

    இந்த மனு தற்காலிகத் தலைமை நீதிபதி சதீஷ்குமார் அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் பல முறை அறிவுறுத்தியும், இதுவரை அரசுத் தரப்பில் சரியான பதில் அளிக்கவில்லை.

    எனவே, கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழில் பெயர் சூட்டும் படங்களுக்கு வரிவிலக்கு அளிப்பது தொடர்பாக திருத்தம் கொண்டு வந்த அரசாணைக்கு இரண்டு வாரத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கிறோம் என உத்தரவிட்டனர்.

    English summary
    Films with a Tamil title and 'promoting Tamil culture' would not be able to enjoy the eight-year-old government policy, extending entertainment tax exemption benefit, any more, as the Madras high court stayed the operation of a government order on Thursday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X