Don't Miss!
- News ரேஷன் அரிசி கடத்தும் ஆளுங்கட்சி புள்ளி "பாம்பு" கார்த்திக்.. விவகாரத்தை கையில் எடுத்த அண்ணாமலை!
- Sports IPL Points Table -மும்பையின் பிளே ஆப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த டெல்லி! சிஎஸ்கேக்கு சவால் விட்ட பண்ட்
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 6 வகை நபர்கள் எதிரியை விட மோசமானவர்கள்... இவர்களிடம் தெரியாமகூட உதவி கேட்கக்கூடாது...!
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
புதிய உற்சாகத்துடன் இசைப் பணியைத் தொடங்கினார் இளையராஜா!
சென்னை: மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி, சில தினங்கள் ஓய்வுக்குப் பிறகு புதிய உற்சாகத்துடன் இசைப் பணியைத் தொடங்கினார் இசைஞானி இளையராஜா.
இசைஞானி இளையராஜா கடந்த சில வாரங்களுக்குமுன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய இளையராஜா, மருத்துவர்களின் ஆலோசனையின்படி ஒருவாரம் கட்டாய ஓய்வில் இருந்தார்.
மலேசிய ரசிகர்களுக்காக
இதனால் சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமல் போனது. இருந்தும் ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக வீடியோ கான்பரன்ஸ் மூலம் தோன்றி ரசிகர்களுக்கு மகிழ்வைத் தந்தார்.
பூரண நலம்
தற்போது பூரண நலம்பெற்று மீண்டும் தன் இசை பயணத்தை தொடங்கிவிட்டார் ராஜா. மருத்துவர்கள் சொன்னதற்காகத்தான் அவர் கட்டாயமாக வீட்டிலிருந்தாரே தவிர, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதிலிருந்தே அவர் பிரசாத் ஸ்டுடியோவுக்கு போக வேண்டும் என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தாராம்.
ஞாயிறன்று கூட...
அதன் விளைவு, ஞாயிற்றுக் கிழமையே பாட்டிசைக்கக் கிளம்பிவிட்டார் ராஜா. கவிஞர் சினேகன் நடிக்கும் ராஜராஜ சோழனின் போர்வாள் திரைப்படத்திற்காக ஒரு பாடலை பிரசாத் தியேட்டரில் அன்று உருவாக்கினார். இன்று திங்கள்கிழமை அந்தப் பாடலுக்கான குரல் பதிவு நடக்கிறது.
ராஜராஜ சோழனுக்குப் பெருமை
இசைஞானி உடல்நலம் பெற்று திரும்பியபின் பதிவு செய்யும் முதல் பாடல், 2014ல் இசைஞானியால் பதிவு செய்யப்படும் முதல் பாடல் என்ற பெருமையுடன் தயாராகிறது ராஜராஜ சோழனின் போர்வாள்!
இந்தப் படத்துக்காக கரூரில் உள்ள ராஜராஜசோழனின் குரு கருவூரார் சந்நிதிக்குப் போன இளையராஜா, மக்கள் முன் பாடலை உருவாக்கியது நினைவிருக்கலாம்.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!