Don't Miss!
- Sports RR VS DC - பேட்ஸ்மேன்களை குறை சொன்ன ரிஷப் பண்ட்.. பவுலிங்கில் அந்த வீரரும் சொதப்பிவிட்டார் என குட்டு
- News பேராசான் பெரியார் மண்ணில் இருந்து.. இன்று பிரசாரத்தை தொடங்கும் முன்னரே சரவெடி கொளுத்திய கமல்ஹாசன்!
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
கதையே இன்னும் ரெடியாகல.. அப்புறம்தான் ஐஸ்வர்யா நடிக்கிறதை சொல்ல முடியும்! - மணிரத்னம்
லடாக்: என்னுடைய அடுத்த படத்தின் திரைக்கதை வேலையே இன்னும் முடியவில்லை. முடிந்த பிறகுதான் யார் நடிக்கிறார்கள் என்பதைச் சொல்ல முடியும் என்றார் இயக்குநர் மணிரத்னம்.
கடல் படத்துக்குப் பிறகு தெலுங்கு, தமிழ், இந்தி என மூன்று மொழிகளில் ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் மணிரத்னம். இதில் மகேஷ்பாபு, நாகார்ஜூனா, ஐஸ்வர்யா ராய் நடிப்பதாக கூறப்பட்டது.
ஆனால் இடையில் மகேஷ்பாபு விலகிக் கொண்டதாகவும் செய்தி வெளியானது.
இது பற்றி எந்தக் கருத்தையும் இதுவரை கூறாமல் வழக்கம் போல அமைதிகாத்தார் மணிரத்னம்.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக்கில் நடைபெற்ற மூன்றாவது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள வந்த மணிரத்னத்திடம், அவரது புதிய படம் குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "என் படத்தின் திரைக்கதை வேலைகளே இன்னும் முடியவில்லை. அது முடிந்த பிறகுதான் ஐஸ்வர்யா போன்றவர்கள் நடிக்கிறார்களா இல்லையா என்பதைச் சொல்ல முடியும். விரைவில் செய்தி வரும்," என்று பதிலளித்தார்.