Don't Miss!
- News போலி பத்திரம்.. ஆன்லைனிலேயே பத்திர மோசடியை கண்டுபிடிக்கலாமா? இதை கவனியுங்க.. தமிழக அரசு சபாஷ்
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நண்பர்களாதான் இருந்தோம்.. பத்திரிகைக்காரங்க கிசுகிசுவால காதலிச்சோம்! - இயக்குநர் விஜய்
ஆரம்பத்தில் நானும் அமலா பாலும் நண்பர்களாகத்தான் இருந்தோம். ஆனா தொடர்ந்து பத்திரிகைகாரர்கள் கிசுகிசுவா எழுதித் தள்ளினதால, நாங்க காதலிக்க ஆரம்பிச்சோம், என இயக்குநர் விஜய் தங்கள் காதலுக்கு பல விளக்கம் கூறினார்.
தெய்வத் திருமகள் படத்தில் அமலா பால் நடிக்க ஆரம்பித்த நாளிலிருந்து, அவரை பிரியாமல் கைகோர்த்து வலம் வந்தவர் இயக்குநர் விஜய். ஏதாவது டுபாக்கூர் விருது வழங்கும் விழா என்றால் கூட, இருவரும் ஜோடியாகக் கை கோர்த்துக் கொண்டுதான் வருவார்கள்.
இதையெல்லாம் பார்த்த பத்திரிகையாளர்கள், இருவருக்கும் காதல் என எழுத ஆரம்பித்தனர்.
தலைவா படத்தின் போது, இருவருக்கும் காதல் முற்றி, கல்யாணத்துக்கு வந்துவிட்டதை பத்திரிகையாளர்கள்தான் வெளியிட்டனர்.
இப்போது திருமண நாளும் உறுதி செய்யப்பட்டுவிட்டது. இதனை அறிவிக்க இன்று விஜய்யும் அமலா பாலும் சேர்ந்து நடத்திய பிரஸ் மீட்டில், நாங்க நண்பர்களா இருந்தோம், ஆனா பிரஸ்தான் காதலிக்க வைத்தது,' என்று பத்திரிகையாளர்களை கல்யாணத் தரகர்களாக்கிவிட்டனர்.
விஜய் கூறுகையில், "இந்தத் திருமணத்துக்கு ஒரு வகையில் பத்திரிகையாளர்களும்தான் காரணம். நீங்கள் அவ்வளவு எழுதினீர்கள் எங்களைப் பற்றி.
அமலாபாலும் நானும் முதலில் நண்பர்களாகத்தான் பழகினோம். எங்களுக்குள் ஆரம்பத்தில் காதல் இல்லை. ஆனால், பத்திரிகைகள்தான் எங்களுக்குள் காதல் என்று கிசுகிசுக்கள் எழுத ஆரம்பித்துவிட்டன. அதன்பிறகுதான் காதலிக்க ஆரம்பித்தோம்,'' என்றார்.
த்தோடா..!