Don't Miss!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- News வெறுப்பு பிரச்சாரத்திற்கு சட்டத்தில் என்ன தண்டனை? தேர்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா?
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Automobiles எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சத்தீஷ்கர் குக்கிராம வாக்காளர் பட்டியலில் ஐஸ்வர்யாராய் பெயர்.... விசாரணைக்கு உத்தரவு
ரெய்கார்க்: சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள குக்கிராமத்தில் தந்தையுடன் வசித்து வருவதாக முன்னாள் உலக அழகியும், அபிஷேக் பச்சனின் மனைவியுமான ஐஸ்வர்யாராயின் பெயர் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலில் வெளியாகியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
பிரபல நடிகையும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக்பச்சனுடன் மும்பையில் வசித்து வருகிறார். அவர்களுக்கு 2 வயதில் ஆரத்யா என்ற குழந்தையும் உள்ளது.
இந்நிலையில், சத்தீஷ்கர் மாநில குக்கிராமத்தில் ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி வாக்காளர் அட்டை இருப்பது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
குஹாரி கிராமத்தில்....
சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள ஜஷ்பூர் மாவட்டம் பதால்கான் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் குஹாரி கிராமத்தில் ஐஸ்வர்யராய் வசிப்பதாக அவரது பெயர் உள்ளது.
தந்தை பெயர்....
அந்த தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி எண் 15-ல் ஜஸ்வர்யாராய் பெயர் இடம் பெற்று உள்ளது. அதில் ஐஸ்வர்யராய் (வயது23), குஹாரி கிராமம், வீட்டு எண் 376 என்ற முகவரியில் அவரது தந்தையுடன் வசிப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
புகைப்படத்துடன் கூடிய....
மேலும், ஐஸ்வர்யா ராயின் தெளிவான புகைப்படத்துடன் அந்த வாக்காளர் பட்டியல் அமைந்துள்ளது. அதன்படி, ஐஸ்வர்யா ராயின் தந்தை என தினேஷ்ராய் என்பவரது பெயர் பதிவு செய்யப் பட்டுள்ளது.
குழப்பம்....
மேலும் ஐஸ்வர்யா ராய்க்கு தற்போது 23 வயதாவதாகவும் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மிகவும் பிரபலமான நடிகையான ஐஸ்வர்யாராயின் பெயர் இவ்வாறு போலியாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பது குறித்து ஜஷ்பூர் மாவட்ட கலெக்டர் எல்.எஸ்.கேன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
விசாரணை....
ஐஸ்வர்யா ராய் அந்த பகுதியில் வசிக்கவில்லை. அப்படியிருந்தும் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றது எப்படி? புகைப்படம் மட்டும் மாறி விட்டதா என்பது குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.