Don't Miss!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- News ஏப்ரல் 19ம் தேதி சம்பளத்துடன் பொது விடுமுறை: லோக்சபா தேர்தல் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
என்னை தொழில் ரீதியாக முடக்க சதி!- கவுதம் மேனன்
சென்னை: என்னை தொழில் ரீதியாக முடக்க சிலர் சதி செய்கிறார்கள் என குற்றம்சாட்டியுள்ளார் இயக்குநர் கவுதம் மேனன்.
விண்ணை தாண்டி வருவாயா' படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்காக தனக்கு தர வேண்டிய ரூ. 1 கோடியை கவுதம் மேனன் தரவில்லை என்று தயாரிப்பாளர் ஜெயராமன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில் கவுதம் மேனன் கைதாகும் சூழல் எழுந்துள்ளது.
இதுகுறித்து கவுதம் மேனன் கூறுகையில், "என் தொழிலை முடக்கி போடுவதற்காகவே இதுபோன்ற புகார்கள் கூறப்படுகின்றன. நான் வேறு நபர்களுடன் இணைந்து படங்கள் தயாரிப்பது அவர்களுக்கு பிடிக்கவில்லை.
நான் எப்போது படவேலைகளை துவங்குகிறேனோ அப்போதெல்லாம் இதுபோன்ற இடையூறுகளை ஏற்படுத்துகின்றனர்.
சூர்யாவை வைத்து படம் இயக்குவதாக அறிவித்தபோதே முதல் மிரட்டல் வந்தது. வழக்குப் போட்டார்கள். அதன் பிறகு சிம்பு, அஜீத் படங்கள் பற்றி அறிவிப்பு வெளியிட்டதும் மீண்டும் வழக்கு போட்டார்கள்.
இப்போது அஜீத் பட வேலையை துவங்க இருப்பதால் மீண்டும் கோர்ட்டுக்கு போய் உள்ளனர்.
என் பக்கத்து நியாயங்களை விளக்கி பதில் மனு தாக்கல் செய்து உள்ளேன். ஏற்கனவே இந்த புகாரை கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது என்பதையும் தெரிவித்து உள்ளேன்.
நடிகர் சங்க தலைவர் சரத்குமார், இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் போன்றோர் இப்பிரச்சினையில் தீர்வு காண முன் வந்துள்ளனர். இந்த விவகாரத்தை தயாரிப்பாளர் சங்கத்துக்கு கொண்டு செல்ல இருக்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.