Don't Miss!
- News வெப்ப அலைக்கு பேரு என்ன தெரியுமா? தமிழ்நாட்டுக்கு மஞ்சள் அலர்ட்! மேற்கு வங்கத்திற்கு ரெட் அலர்ட்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ப்ரீத்தி ஜிந்தாவின் புகார் பொய்யானது... அதிர்ச்சியாக உள்ளது!- நெஸ் வாடியா
மும்பை: ப்ரீத்தி ஜிந்தா என்மீது கூறியுள்ளவை பொய்யான குற்றச்சாட்டுகள். எனக்கு இது அதிர்ச்சியாக உள்ளது என நெஸ் வாடியா கூறியுள்ளார்.
பாலிவுட் நடிகையும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ள பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவருமான பிரீத்தி ஜிந்தா தனது முன்னாள் ஆண் நண்பர் மற்றும் கிரிக்கெட் வியாபார கூட்டாளி நெஸ் வாடியா மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ளனர் போலீசார். நெஸ் வாடியா, பிரபல பாம்பே டையிங் நிறுவன அதிபர்.
ப்ரீத்தி ஜிந்தாவுடன் 5 ஆண்டுகள் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்தனர். பின்னர் பிரிந்தனர். உறவு பிரிந்தாலும், பிஸினஸில் பிரியவில்லை. கிரிக்கெட் வியாபாரத்தை இணைந்தே செய்தனர்.
இந்த நிலையில் கடந்த மே 30-ம் தேதி தான் ப்ரீத்தியை பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த புகார் குறித்து அவர் கூறுகையில், "பிரீத்தி ஜிந்தாவின் புகார் அதிர்ச்சி அளிக்கிறது. அவர் என் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் அத்தனையும் பொய்யானவை. இந்த வழக்கைச் சந்திக்க தயாராகவே உள்ளேன். காரணம், இது ஆதாரமற்ற புகார் என்பது எனக்குத் தெரியும்,'' என்றார்.