Don't Miss!
- News சத்தீஸ்கரில் என்கவுண்டர்.. 18 பேர் சுட்டுக்கொலை.. தலைக்கு ரூ. 25 லட்சம் நிர்ணயிக்கப்பட்டவரும் பலி
- Automobiles உடனே திருப்பி கொண்டு வாங்க! பிரபல நிறுவனம் திடீர் அறிவிப்பு! விலை கம்மினு வாங்கீட்டு புலம்பும் உரிமையாளர்கள்!
- Lifestyle இந்த உணவுகளில் முட்டையை விட துத்தநாகமும் மற்ற ஊட்டச்சத்துக்களும் அதிகமாக உள்ளதாம்... தினமும் சாப்பிடுங்க...!
- Technology இனி டபுள் கேம் ஆட முடியாது! Online அம்சத்திற்கு வந்த திடீர் மாற்றம்.. WhatsApp-ல் புது வெடி.. ரெடி ஆகிக்கோங்க!
- Finance கோயம்புத்தூர்-ஐ கலக்க வரும் புதிய திட்டம்.. அதுவும் இந்த இடத்தில்.. வாவ்..!!
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Sports ஐபிஎல் நல்லா இருக்கனும்னா, ஆர்சிபி அணியை விற்று விடுங்கள்.. டென்னிஸ் ஜாம்பவான் கொந்தளிப்பு
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
பேச்சுவார்த்தையில் சமரசம்... பிரகாஷ்ராஜ் மீதான தடை ரத்து
ஹைதராபாத் : பேச்சுவார்த்தையில் உண்டான சமரசத்தைத் தொடர்ந்து நடிகர் பிரகாஷ்ராஜ் மீதான தடையை தெலுங்கு பட உலகம் ரத்து செய்துள்ளது
'ஆவடு' என்ற தெலுங்கு பட ஷூட்டிங்கின் போது, கதையை மாற்றச் சொல்லி பிரகாஷ்ராஜ் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், அப்படத்தின் டைரக்டருக்கும், பிரகாஷ்ராஜுக்கும் இடையே
மோதல் ஏற்பட்டது.
மோதலின் போது, பிரகாஷ்ராஜ் தகாத வார்த்தைகள் கூறியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இயக்குநர் சங்கத்தில் புகார் அளிக்கப் பட்டிருந்தது.
தடை...
இதையடுத்து பிரகாஷ்ராஜுக்கு ஒரு வருடம் படங்களில் நடிக்க தடை விதிக்க டைரக்டர் சங்கம் முடிவு எடுத்தது.
துரதிர்ஷ்டவசமானது...
இதுகுறித்து பிரகாஷ்ராஜ் கூறும்போது, ‘‘இருபது வருடம் சினிமாவில் இருக்கும் எனக்கு ஒரு வருடம் தடை விதிப்பது துரதிர்ஷ்டவசமானது. நான் எந்த தப்பும் செய்யவில்லை'' என விளக்கமளித்திருந்தார்.
பேச்சுவார்த்தையில் சமரசம்...
இந்நிலையில் நடிகர் சங்கம், டைரக்டர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் ஒன்று கூடி பிரகாஷ்ராஜ் விவகாரம் குறித்து ஆலாசனை நடத்தினர். இதில் ‘ஆவடு' பட டைரக்டர் ஸ்ரீனு வைத்லா மற்றும் பிரகாஷ்ராஜும் பங்கேற்றனர்.
தடை வாபஸ்...
பேச்சுவார்த்தையில் இரு தரப்பினருக்குமிடையே சமரசம் ஏற்பட்டதையடுத்து பிரகாஷ்ராஜுக்கு விதிக்கப் பட்ட தடை வாபஸ் பெறப்பட்டது. மேலும், அவருக்கு எதிரான நடவடிக்கைகளும் கைவிடப்பட்டன.