Don't Miss!
- News முன்னோடி தமிழ்நாடு.. நம்ம ஆட்சியில் இது முக்கியம்! பட்டியல் போட்ட முதல்வர்..வியந்து பார்த்த INDIA!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அரை நிர்வாண போஸ்டர்: சிரஞ்சீவி மகன், ஏமி ஜாக்சன் மீது வழக்கு
கர்ணூல்: யவடு படத்தின் போஸ்டர் ஆபசமாக இருந்ததாகக் கூறி ஒருவர் புகார் கொடுத்ததை அடுத்து ஹீரோ ராம்சரண் தேஜா, ஏமி ஜாக்சன் மற்றும் 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். போஸ்டரில் ஏமி ஜாக்சன் அரை நிர்வாணமாக போஸ் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா, ஸ்ருதி ஹாஸன், ஏமி ஜாக்சன் நடித்துள்ள தெலுங்கு படமான யவடு கடந்த 12ம் தேதி ரிலீஸானது. படத்தின் போஸ்டர்கள் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் கர்ணூல் மாவட்டத்தைச் சேர்ந்த கே. நாகேந்திர பிரசாத் என்பவர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.
அவர் தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
யவடு பட போஸ்டர்கள் பார்க்க ஆபாசமாக உள்ளன. அதில் ஏமி ஜாக்சன் அரை நிர்வாண கோலத்தில் போஸ் கொடுத்துள்ளார். இதனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
அவரது புகாரின்பேரில் ராம்சரண் தேஜா, ஏமி ஜாக்சன் மற்றும் 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.