Don't Miss!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- News தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் இன்று லோக்சபா தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'இனியா வீட்டில் திருடியது நான்தான்'... சரணடைந்தார் மாப்பிள்ளை ஷாபினின் நண்பன்!
திருவனந்தபுரம்: நடிகை இனியா வீட்டில் திருடியது தானே என்று ஒப்புக் கொண்டு ராஜன் என்பவர் போலீசில் சரணடைந்துள்ளார்.
தமிழில் பிரபல நடிகையாக உள்ளவர் இனியா. இவரது சகோதரி சுவாதிக்கும் திருவனந்தபுரம் பாற்றூரைச் சேர்ந்த ஷாபின் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. விரைவில் திருமணம் நடக்க இருந்தது.
இந்த நிலையில் 2 வாரங்களுக்கு முன்பு இனியா வீட்டிலிருந்த நகை மற்றும் பணம் கொள்ளை போனது. இதனை சுவாதிக்கு நிச்சயம் செய்யப்பட்ட ஷாபினும் அவரது நண்பர்களும் சேர்ந்து கொள்ளை அடித்ததாகக் கூறப்பட்டது.
இதுபற்றி திருவனந்தபுரம் கரமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து மணமகன் ஷாபினையும், அவரது கூட்டாளி ஷஜி என்பவரையும் கைது செய்தனர். இன்னொரு நண்பனான ராஜன் என்பவரைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில் ராஜன், நேற்று திருவனந்தபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இந்த தகவல் கரமனை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ராஜனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர். அதற்கான ஏற்பாடுகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ராஜன் என்பவர் ஷாபினின் நண்பன். இவர்கள் நால்வரும் சேர்ந்துதான் திட்டமிட்டு இந்தக் கொள்ளையை நடத்தியதாக போலீசார் தெரிவித்திருந்தனர். இப்போது தான் மட்டும் திருடியதாக ராஜன் கூறியுள்ளார்.
சுவாதி - ஷாபின் திருமணம் ரத்து செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.