Don't Miss!
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் 36 வயதில் மர்ம மரணம்!
ஸ்டாக்ஹோம்: சுவீடனைச் சேர்ந்த பிரபல இயக்குநர் மாலிக் பென்ட்ஜொலல் தனது 36 வயதில் நேற்று மர்மமான முறையில் மரணமடைந்தார்.
அவரது மரணத்துக்கான காரணம் இதுதான் என தெளிவாகத் தெரியவில்லை.
சர்ச்சிங் பார் சுகர் மேன் என்ற தனது இசை வீடியோ ஆவணப் படத்துக்காக 2013-ம் ஆண்டு ஆஸ்கர் விருது வென்றவர் பென்ட்ஜொலல்.
1977-ல் பிறந்த பென்ட்ஜொலல், தொன்னூறுகளில் டிவி தொடரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் ஸ்வீடன் வானொலியில் பணியாற்றினார். ஒரு பயணத்தின்போதுதான் சர்ச்சிங் பார் சுகர் மேன் என்ற படத்துக்கான கதைக்கரு அவருக்குக் கிடைத்தது. அந்தப் படத்தை முடிக்க அவருக்கு 4 ஆண்டுகள் தேவைப்பட்டது.
ஆனால் அதற்கான பலன் கிடைத்துவிட்டது. 1984-ம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்கர் வென்ற ஸ்வீடிஷ்காரர் என்ற பெருமையைப் பெற்றார் பென்ட்ஜொலல்.
அவரது திடீர் மரணம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பென்ட்ஜொலல் மரணம் அனைவரையும் உறைய வைத்துள்ளது என்று ஸ்வீடிஷ் பிலிம் இன்ஸ்டிட்யூட் தெரிவித்துள்ளது.
திருமணமாகாத அவர், தனது பெற்றோர் மற்றும் சகோதரருடன் வசித்து வந்தார்.