Don't Miss!
- News சென்னை பள்ளிக்கரணை ஆணவ கொலை: கோமாவுக்கு சென்ற பிரவீனின் மனைவி! ஷர்மி தற்கொலைக்கு யார் காரணம்?
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அஞ்சாதே படத்தைத் தொடர்ந்து ‘சாலையோரம்’ படத்தில் வில்லனாக மிரட்டும் பாண்டியராஜன்
சென்னை: அஞ்சாதே படத்தில் வில்லனாக நடித்த நடிகர் பாண்டியராஜன், சாலையோரம் என்ற படத்தில் மீண்டும் வில்லனாக நடிக்க இருக்கிறாராம். இப்படத்தை பி.வாசுவிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்த மூர்த்தி கண்ணன் டைரக்டு செய்கிறார்.
தனது காமெடி மற்றும் குடும்பப்பாங்கான படங்கள் மூலம் மக்களிடம் அமோக ஆதரவைப் பெற்றவர் இயக்குநரும்,நடிகருமான பாண்டியராஜன். பிரபல நாயகனாக வலம் வந்த பாண்டியராஜன், இடையில் சிலகாலம் சினிமாவை விட்டு விலகியிருந்தார்.
பின்னர், மிஷ்கின் இயக்கத்தில் நரேன், பிரசன்னா மற்றும் அஜ்மல் நடிப்பில் வெளியான அஞ்சாதே படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இதுவரை காமெடி நடிகராக மட்டுமே அறியப் பெற்ற பாண்டியராஜனின் வில்லத்தனமும் மக்களைக் கவரத் தான் செய்தது.
மீண்டும் வில்லன்....
எனவே, தற்போது மீண்டும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்கிறாராம் பாண்டியராஜன். சாலையோரம் எனப் பெயரிடப்பட்ட இப்படத்தில் புதுமுகங்கள் ராஜ்-செரீனா ஆகிய இருவரும் கதாநாயகன்-கதாநாயகியாக நடிக்க, சிங்கம்புலி, முத்துக்காளை லொள்ளு மனோகர், மலையாள நடிகர் நசீர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இசை....
சிங்கப்பூர் தமிழரான சேதுராம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். தினேஸ் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்மைலி பிக்சர்ஸ் சார்பில் முருகன் சுப்புராயன் தயாரிக்கிறார்.
அப்பா பாடல்....
இப்படத்தில், அப்பாவை பற்றிய பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளதாம். அதனை டைரக்டர் மூர்த்தி கண்ணன் எழுதியிருக்கிறார்.
குப்பைக்கிடங்குகளில் படப்பிடிப்பு....
சாலையோரம் படத்தின் பெரும்பகுதி சென்னை புறநகரில் அமைந்திருக்கும் குப்பை கிடங்குகளில் படமாக்கப் பட்டுள்ளதாம்.