twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திருட்டு வி.சி.டிக்கு எதிராக நானே இன்றுமுதல் களமிறங்குகிறேன்! - இயக்குநர் பார்த்திபன்

    By Shankar
    |

    சென்னை: திருட்டு விசிடிக்கு எதிராக இன்று முதல் தாமே களமிறங்கப் போவதாக அறிவித்துள்ளார் இயக்குநர் பார்த்திபன்.

    கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்'. இப்படத்தை பார்த்திபன் இயக்கியிருந்தார். முற்றிலும் புதுமுகங்கள் நடித்திருந்தனர்.

    ஆர்யா, விஷால், பிரகாஷ்ராஜ், விஜய்சேதுபதி, அமலாபால், டாப்சி உள்ளிட்ட பலர் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தனர்.

    படத்தைப் பார்த்த பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். ஆரம்பத்தில் 200 அரங்குகளில் மட்டுமே வெளியான இந்தப் படத்துக்கு, மேலும் 100 அரங்குகள் கூடுதலாகக் கிடைத்துள்ளன.

    Parthiban's individual fight against video piracy

    இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் பார்த்திபனும் அந்தப் படத்தின் குழுவினரும்.

    அப்போது பார்த்திபன் பேசுகையில், "கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படம் வெற்றியடைந்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது. படம் பார்த்த பலர் என்னை பாராட்டுகின்றனர்.

    ஒரு பக்கம் சந்தோஷம் இருந்தாலும் மறுபக்கம் துக்கமும் வந்துள்ளது. இப்படம் தற்போது திருட்டு வி.சி.டி.யில் வெளியாகியுள்ளது (இரண்டு டிவிடிகளை காட்டினார்). ஒரு டிவிடி வெறும் முப்பது ரூபாய்க்கு கிடைக்கிறது. குடும்பத்தோடு பார்த்திவிடுகிறார்கள்.

    திருட்டி வி.சி.டி. என்பது தற்போது பரவி வரும் எபோலா நோய் போல் ஆகிவிட்டது. இந்நோய்க்கு மருந்து இல்லாதது போல் திருட்டி வி.சி.டி.யும் ஒழிக்க முடியாத ஒன்றாகி வருகிறது. ஆனால் நான் அதை விடமாட்டேன்.

    பக்கத்து மாநிலங்களில் எங்கும் திருட்டு விசிடியே இல்லை.

    நானே நேரடியாக களத்தில் இறங்குகிறேன். நாளையே அந்த கடைகளுக்குப் போய் திருட்டி வி.சி.டி. தயாரிப்பவர்களை போலீஸ் துணையோடு பிடிக்க போகிறேன். இப்படம் எப்படி திருட்டு வி.சி.டி.யில் வந்தது என்று கண்டறிய ஒரு தனி குழு இருக்கிறது. என்ன.. அதற்கு ஐம்பதாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். கொஞ்சம் கூடுதல் நஷ்டம்தான்.

    இந்த டிவிடிகள் ஏதோ ஒரு தியேட்டரின் துணையோடுதான் தயாராகின்றன. அதைக் கண்டுபிடித்து, அந்த அரங்கை தடை செய்ய வேண்டும்," என்றார்.

    திருட்டு விசிடி வர முக்கிய காரணம் வெளிநாடுகளுக்கு படத்தை முன்கூட்டியே அனுப்புவதுதான். வெளிநாட்டு உரிமையை விற்காமல் நிறுத்தி வைக்கலாமே? என்று பார்த்திபனிடம் கேட்டபோது, 'இந்த முறை வெளிநாட்டுக்கு பிரதிகளை அனுப்பும்போது மிகுந்த கவனத்துடன் இருந்தோம். ஒரு வாரம் முன்பு டம்மி பிரிண்டை அனுப்பினேன். ரிலீசுக்கு ஒரு நாள் முன்புதான் உண்மையான பிரதியை அனுப்பினேன். எனவே வெளிநாட்டிலிருந்து திருட்டு விசிடி வரவில்லை," என்றார்.

    அரசிடம் ஏன் சரியாக முறையிடவில்லை? சினிமாக்காரர்களுக்குள் ஒற்றுமையில்லையே?

    முறையிட்டுக் கொண்டுதான் உள்ளோம். ஆனால் சினிமா சங்கங்கள், தயாரிப்பாளர்களுக்குள் ஒற்றுமை இல்லாததுதான் இந்த நிலைக்குக் காரணம் என்ற கருத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். இதையெல்லாம் சரிப்படுத்தி, விரைவில் அரசிடமும் ஒரு கோரிக்கை வைக்கவிருக்கிறோம்.

    English summary
    Director Radhakrishnan Parthiban says that he would fight against video piracy individually from today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X