Don't Miss!
- Sports சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவு! டிவோன் கான்வே விலகல்.. மாற்று வீரராக யாக்கர் கிங் அறிவிப்பு
- News ரூ.1 கூட செலவில்லாமல் 5 லட்சம் ரூபாய்.. ரேஷன் கார்டு இருக்கா? அப்ப கன்பார்ம்டு.. மத்திய அரசு சூப்பர்
- Finance இந்த ஒரு விஷயத்துக்கு இந்தியா, விளாடிமீர் புடின்-க்கு நன்றி சொல்லிய ஆகனும்..!
- Lifestyle அடுத்தமுறை சிக்கன் கிரேவியை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. சும்மா வேற லெவல்-ல இருக்கும்...
- Automobiles நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- Technology வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.. NASA, SpaceX-லாம் வரிசையில் வந்து நில்லு!
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கதை திரைக்கதை வசனம் இயக்கம் தள்ளிப் போனது!
ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியாவதாக இருந்த ஆர் பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படம் தள்ளிப் போய்விட்டது. அந்தத் தேதியில் சில பெரிய படங்கள் வரவிருப்பதால் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப் போகிறார்களாம்.
வித்தகன் படத்துக்குப் பிறகு பார்த்திபன் இயக்கியுள்ள படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம். இந்தப் படத்தில் அவர் நடிக்கவில்லை. இயக்குநர் பொறுப்போடு நிறுத்திக் கொண்டார்.
ஆனால் ஆர்யா, அமலா பால், சினேகா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் இந்தப் படத்தில்.
இந்தப் படத்தை பார்த்திபன் மிக முக்கியப் படைப்பாகக் கருதுவதால், அனைத்து ரசிகர்களும் பார்க்கும் வகையில் படத்தை வெளியிட வேண்டும் என முயற்சித்து வருகிறார்.
படத்தை வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி அதிக திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அன்றைய தேதியில் ஜிகிர்தண்டா, சரபம், சண்டியர் போன்ற படங்கள் வெளியாகின்றன.
இத்தனை படங்களுக்கு மத்தியில் தன் படத்தை வெளியிட்டால், திரையரங்குகள் கிடைப்பது கடினம், சரியாக மக்களைப் போய்ச் சேர்வதும் சந்தேகம் என்பதை உணர்ந்ததால், கதை திரைக்கதை வசனம் இயக்கத்தை வேறு தேதிக்கு மாற்ற பார்த்திபன் முடிவு செய்துள்ளார்.
புதிய ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிக்கப் போகிறாராம் பார்த்திபன்.