Don't Miss!
- Sports அங்க உயிரைக் கொடுத்து விளையாடுறாங்க.. ஒரு கேப்டனா நீ என்ன பண்ணிருக்கனும்.. ஹர்திக்கை பொளந்த பதான்!
- Automobiles 5கதவுகள் வெர்ஷனிலும் வருகிறது மஹிந்திரா தார்.. இந்தியர்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு..
- News மக்களவையில் ‘தனி ஒருவன்’ பாரிவேந்தர் எம்பி! செயல்பாடு எப்படி? என்ன மார்க்?
- Technology பட்டிதொட்டியெல்லாம் கலக்கும் BSNL.. மாதம் ரூ.99.. 365 நாள் வேலிடிட்டி.. கம்மி காசில் ஓஹோனு நன்மை..
- Education மே 2-வது வாரத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை ஆன்-லைன் விண்ணப்ப தேதி அறிவிப்பு...!
- Finance அமெரிக்கா தொட முடியாத உயரத்தை இந்தியா தொட்டது.. பங்குச்சந்தையில் புதிய மாற்றம்..!!
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமானமானவர்கள் கள்ளக்காதலை நோக்கி நகர இந்த 5 விஷயங்கள்தான் காரணமாம்...!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
சிவாஜியை அறிமுகம் செய்தவருக்கு பொங்கல் சீர் கொடுத்த நடிகர் பிரபு
சென்னை: மறைந்த நடிகர் 'செவாலியே' சிவாஜியை சினிமாவில் அறிமுகம் செய்த பெருமாள் முதலியார் வீட்டுக்கு சீர்கொண்டு சென்றார் நடிகர் பிரபு
நேஷனல் பிக்சர்ஸ் பட நிறுவனத்தின் உரிமையாளர் பெருமாள் முதலியார் தான் சிவாஜி கணேசனை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார். பராசக்தி திரைப்படத்தில் கருணாநிதி வசனத்தில் சிவாஜி நடித்த காட்சிகள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவை.
தன்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமாள் முதலியார் வீட்டுக்கு, ஆண்டுதோறும் பொங்கல் சீர் கொண்டு செல்வது சிவாஜி கணேசனின் வழக்கமாக இருந்தது. தனது மனைவி கமலா மற்றும் குழந்தைகளுடன் சென்று சீர்வரிசை அளித்து பெருமாள் முதலியாரிடம் சிவாஜி ஆசி பெற்று வருவார்.
சிவாஜி கணேசன் மறைவை தொடர்ந்து அவரது மகன்கள் ராம்குமார், பிரபு ஆகியோர் இவ்வழக்கத்தை பின்பற்றி வருகின்றனர்.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, நடிகர் பிரபு, அவருடைய மனைவி புனிதா மற்றும் மகன் விக்ரம் பிரபு ஆகியோருடன் காட்பாடி காந்தி நகர் கிழக்குப் பகுதியில் உள்ள பெருமாள் முதலியார் வீட்டுக்கு சென்றனர். அவர்களை பெருமாள் முதலியார் மனைவி மீனாட்சியம்மாள் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர். பிரபு குடும்பத்தினர் அளித்த சீர்வரிசையைப் பெற்றுக் கொண்ட மீனாட்சியம்மாள் அவர் களுக்கு பொங்கல் பரிசு அளித்து ஆசி அளித்தார்.