Don't Miss!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சிறையிலுள்ள சஞ்சய்தத் தயாரிப்பில் ஹிந்தி படம் இயக்கும் பிரபுதேவா
மும்பை: பாலிவுட் முன்னணி நடிகர் சஞ்சய் தத் தயாரிக்கும் படத்தை பிரபுதேவா இயக்குகிறார்.
தமிழில் இருந்து ஹிந்திக்கு சென்ற பிரபுதேவா, அங்கு முக்கியமான இயக்குனராகி விட்டார். அவர் இயக்கிய, வான்டட், ரவுடி ரத்தோர், ராமையா வஸ்தாவையா ஆகிய படங்கள் தொடர்ந்து ஹிட்டானதால் பாலிவுட் உலகம் பிரபுதேவாவுக்கு ரத்தன கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்து வருகிறது.
இப்போது அவர் அஜய் தேவ்கன் நடிக்கும் ஆக்ஷன் ஜாக்சன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதுபற்றி பிரபுதேவா கூறியதாவது: ஆக்ஷன் ஜாக்சன் படத்துக்கு இன்னும் 15 நாள் ஷூட்டிங் இருக்கிறது. அதோடு படம் முடிந்துவிடும்.
அடுத்து அக்ஷய் குமார் நடிக்கும் படத்தை இயக்குகிறேன். ரெமோ இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறேன். இதற்கிடையில் சஞ்சத் தத் தயாரிக்கும் படத்தை இயக்க இருக்கிறேன். கதையோ மற்ற விஷயங்களோ முடிவாகவில்லை. இவ்வாறு பிரபுதேவா கூறினார்.
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி சிறையிலுள்ள சஞ்சய் தத்தின் மனைவி மான்யதா தயாரிப்பு நிர்வாகத்தை கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.