Don't Miss!
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- News படுக்கையறையில் ஷோபா.. அந்த கோலத்தை கண்டு கதறிய மகள்.. மீண்டும் மீண்டும் டார்ச்சர்.. கொடுமையை பாருங்க
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வயசாகிடுச்சி... இனி எந்தப் பெண்ணுடனும் உறவில்லை! - பிரபு தேவா
சென்னை: எனக்கு வயசாகிவிட்டது. இனி எந்தப் பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்ள விரும்பவில்லை. என் மகன்கள்தான் இனி எல்லாமே, என்று கூறியுள்ளார் பிரபு தேவா.
இந்தியாவின் முன்னணி சினிமா இயக்குநராக உயர்ந்திருக்கும் பிரபு தேவாவின் காதல் கதைகள் நாடறிந்தவை.
ரம்லத் என்பவரை காதலித்து மணந்தார். மூன்று குழந்தைகள் பிறந்தன இருவருக்கும். மூவரில் ஒரு மகன் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டான்.
அப்போது ஆறுதல் சொல்ல வந்தார் நடிகை நயன்தாரா. அடுத்த சில மாதங்களில் இருவரும் காதலிப்பதாக செய்திகள். ஒரு நாள் அதை பிரபுதேவாவே ஒரு அறிவிப்பு மூலம் உறுதி செய்தார்.
நயன்தாராவைத் திருமணம் செய்வதற்காக ரம்லத்தை விவாகரத்தே செய்துவிட்டார் பிரபு தேவா. இந்தக் கதை ஒரு ஆண்டு முழுவதும் பரபரப்பாக ஓடியது.
ஒரு நாள் திடீரென கிறித்தவ மதத்திலிருந்து இந்துவாக மாறினார் நயன்தாரா. அடுத்த சில தினங்களில் இருவரும் திருமணம் செய்து கொண்டது போன்ற படங்கள் வெளியாகின.
ஆனால் சில மாதங்களில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்துவிட்டனர். பிரபுதேவா மும்பையில் செட்டிலாகிவிட்டார்.
மகன்களைப் பார்க்க மட்டும் அடிக்கடி சென்னை வந்து போகிறார். இனி தன் வாழ்க்கையை மகன்களுக்காக செலவிடப் போவதாகக் கூறி வருகிறார்.
இனி உங்கள் வாழ்க்கையில் வேறு பெண்ணுக்கு இடமில்லையா.. மனைவியுடன் மீண்டும் சேருவீர்களா என்று கேட்டபோது, "எந்த பெண்ணுடனும் எனக்கு உறவு இல்லை. 2 ஆண்டுகளாகத் தனியாகத்தான் இருக்கிறேன்.
எனக்கு நிறைய வேலைகள் உள்ளன. கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. இதில் பெண்களுடன் சுற்ற ஏது நேரம்?
எனக்கு இப்போது வயதாகி விட்டது. மிக சீக்கிரமே என் மகன்கள் கேர்ள் பிரண்டுகளோடு வரும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது," என்றார்.