Don't Miss!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- News கிளாம்பாக்கத்தில் அலைமோதிய கூட்டம்.. நள்ளிரவில் திடீரென போராட்டத்தில் குதித்த பயணிகள்
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ப்ரீத்தி, வாடியா சண்டையை விலக்கிவிட்ட ஐபிஎல் சிஓஓவிடம் வாக்குமூலம் பெற போலீஸ் திட்டம்
மும்பை: நடிகை ப்ரீத்தி ஜிந்தா அளித்த புகாரின்பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் போலீசார் 2 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
இந்தி நடிகையும் கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் இணை உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா தனது முன்னாள் காதலரும், பிரபல தொழில் அதிபருமான நெஸ் வாடியா பொது இடத்தில் தன்னை மிரட்டி, பாலியல் தொந்தரவு அளித்ததாக போலீசில் புகார் கொடுத்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மே 30ம் தேதி மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் நெஸ் வாடியா ப்ரீத்தியிடம் தகராறு செய்ததை நேரில் பார்த்த 2 பேரை அடையாளம் கண்டு அவர்களிடம் வாக்குமூலம் வாங்கியுள்ளனர். ஆனால் அவர்கள் யார், அவர்கள் என்ன கூறினார்கள் என்ற விவரத்தை தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர்.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூரில் நடந்த ஐபிஏல் வீரர்கள் ஏலத்தின்போதும் ப்ரீத்தியும், நெஸ் வாடியாவும் சண்டை போட்டுள்ளனர். அவர்களின் சண்டை மோசமடைந்ததால் ஐபிஎல் சிஓஓ சுந்தர் ராமன் தலையிட்டு அவர்களை விலக்கி வைத்துள்ளார். இதனால் ப்ரீத்தி விவகாரம் தொடர்பாக சுந்தர் ராமனிடம் வாக்குமூலம் வாங்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளார்களாம்.
தற்போது அமெரிக்காவில் இருக்கும் ப்ரீத்தி நாடு திரும்பியதும் அவரிடம் வாக்குமூலம் வாங்கிய பிறகே போலீசார் நெஸ் வாடியாவிடம் விசாரணை நடத்த திட்டமிள்ளார்கள்.