Don't Miss!
- News நடுவானில் பெங்களூர் விமானத்தை நெருங்கிய எமிரேட்ஸ் விமானம்.. மிக பெரிய விபத்து தவிர்ப்பு! பகீர்
- Automobiles ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
நீ வெறும் நடிகை தானே, உன்னை காணாமல் போய்விடச் செய்வேன் என வாடியா மிரட்டினார்: ப்ரீத்தி ஜிந்தா
மும்பை: என்னை காணாமல் போகச் செய்ய முடியும் என்று தொழில் அதிபர் நெஸ் வாடியா மிரட்டினார் என்று நடிகை ப்ரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகையும், கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் இணை உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா தனது முன்னாள் காதலரும், பிரபல தொழில் அதிபருமான நெஸ் வாடியா மீது மும்பை போலீசில் புகார் கொடுத்தார்.
அந்த புகார் மனுவின் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. ப்ரீத்தி தனது புகாரில் கூறியிருப்பதாவது,
எனக்கு நெஸ் வாடியாவை 10 ஆண்டுகளாக தெரியும். அவரை காதலித்து வந்தேன். ஆனால் நாங்கள் பிரிந்துவிட்டோம். காதல் முறிவுக்கு பிறகு நாங்கள் இருவரும் கிங்ஸ் XI அணியின் உரிமையாளர்கள் என்ற முறையில் மட்டுமே பேசி வந்தோம். தற்போது நாங்கள் பேசிக் கொள்வதே இல்லை. வேலை தொடர்பாக எங்களுக்கு இடையே இரண்டு முறை சூடான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வாடியா என்னை தரக்குறைவாக திட்டி, மோசமாக நடந்து கொண்டதால் நான் என் குடும்பத்தார், நண்பர்கள், உறவினர்கள் முன்பு அசிங்கப்பட வேண்டியதாகிவிட்டது. இது சரியில்லை என்று அப்போதே நான் அவரை எச்சரித்தேன்.
கடந்த மே மாதம் 30ம் தேதி மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டி நடந்தபோது நெஸ் வாடியா என்னிடம் வந்து நீ வெறும் நடிகை, நான் அதிகாரமிக்க நபர் உன்னை காணாமல் போகச் செய்துவிடுவேன் என்று மிரட்டினார். இதையடுத்து தான் அவர் மீது புகார் கொடுக்க முடிவு செய்தேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
நெஸ் வாடியா மீது ஏற்கனவே ஏன் புகார் அளிக்கவில்லை என்று ப்ரீத்தியிடம் கேட்டதற்கு அவர் கூறுகையில், பிரச்சனை வேண்டாம் என்று நினைத்து விட்டுவிட்டேன் என்றார்.
-
அடக்கன்றாவியே.. ஆடையணியாமல் ஹோலி கொண்டாடிய கார்த்தி பட ஹீரோயின்.. பார்வதியா நடிச்சிட்டு இப்படியா?
-
Maniratnam's Goat Life Review: எப்படி இது சாத்தியமாச்சு.. ஆடுஜீவிதம் படத்திற்கு மணிரத்னம் விமர்சனம்!
-
கணவனுக்கும் மனைவிக்கும் இதுல கூட போட்டியா?.. ராம்சரண் - உபாசனா சொத்து மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா?