twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு எதிர்ப்பு- இயக்குநர் கவுதமன் கைதாகி விடுதலை!

    By Shankar
    |

    சென்னை: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு எதிர்ப்பு தெரிவித்த இயக்குநர் கவுதமன் உள்ளிட்டோர் நேற்று கைதாகி விடுதலையாகினர்.

    சென்னையில் நேற்று ஒரு நாள் சுற்றுப்பயணம் செய்தார் பிரணாப் முகர்ஜி. அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர் அமைப்பினர் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.

    gouthaman and pranabh mukherjee

    திரைப்பட இயக்ககுநர் கவுதமன் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருந்தார். இதனால் கவுதமன் நேற்று முன்தினம் நள்ளிரவு முன் எச்சரிக்கையாக கைது செய்யப்பட்டார்.

    அவருடன் மாணவர் அமைப்பைச் சேர்ந்த 5 பேர் உள்பட மொத்தம் 7 பேர் கைதானார்கள். நேற்று மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

    விடுதலையானவுடன் இயக்குநர் கவுதமன், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், எங்களுக்கு போலீசார் பெரும் தொல்லை கொடுத்தனர். 2 இடங்களில் மாற்றி, மாற்றி உட்கார வைத்தனர். எங்களோடு கைதானவரை அடித்து துன்புறுத்தினார்கள். இதுதொடர்பாக மனித உரிமை கமிஷனில் புகார் கொடுக்க உள்ளோம், என்று தெரிவித்தார்.

    English summary
    Director Gouthaman was arrested by police and released later for his support to students agitation against President Pranabh Mukherjee.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X