Don't Miss!
- Sports மும்பை : மும்பை இந்தியன்ஸ் டீமை கெடுத்து குட்டிச் சுவர் ஆக்கிய ஹர்திக் பாண்டியா? விளாசி வரும் ரசிகர்கள்
- News பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை! சென்னை ஹைகோர்ட் அதிரடி! சரணடைகிறாரா ராஜேஷ் தாஸ்?
- Finance Adani: விதிமுறைகளை மீறி முதலீடு! வெளிநாட்டு நிறுவனங்கள் செய்த டகால்டி வேலையை கண்டுபிடித்த செபி!
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Automobiles தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
- Technology இது தெரியாம போச்சே.. இன்டர்நெட் இல்லாமல் UPI கட்டணம் செலுத்தலாமா? Google Pay, PhonePe, Paytm மக்களே கவனியுங்க!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு மிரட்டல்: வீடு, அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு
சர்ச்சையே உந்தன் பெயர் ராம் கோபால் வர்மாவோ என்று கூறும் அளவுக்கு சர்ச்சைகளில் சிக்குபவர் இந்த இயக்குனர். அவர் ஏதாவது கருத்து தெரிவித்தால் கூட அது பெரும் சர்ச்சையில் முடிந்துவிடும்.
இந்நிலையில் இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று மும்பை போலீசார் தெரிவித்தனர். ஆனால் யார், என்ன மிரட்டல் விடுத்தார்கள் என்பதை தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டார்கள்.
இது குறித்து ராம் கோபால் வர்மா ட்விட்டர் கூறுகையில்,
பல காரணங்களால் மும்பை போலீசார் எனக்கு பாதுகாப்பு அளித்துள்ளனர். என்ன மிரட்டல் விடுக்கப்பட்டது என்பதை நான் தெரிவிக்க முடியாது. இந்த மிரட்டல் சத்யா 2 படம் தொடர்பாக விடுக்கப்பட்டதா என்பதையும் என்னால் தெரிவிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
வர்மாவின் சத்யா படத்தின் இரண்டாம் பாகமான சத்யா 2 இன்று ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது நவம்பர் 8ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மும்பை நிழல் உலகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வரும் சத்யா என்பவரைச் சுற்றி தான் கதை நகரும்.