Don't Miss!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சரவணன் என்கிற சூர்யா... எதற்கு இப்படி தலைப்பு வைக்கணும்.. பிறகு மல்லுக் கட்டணும்!!
சரவணன் என்கிற சூர்யா... இப்படி ஒரு தலைப்பில் படமெடுத்திருக்கும் ஒரு புது இயக்குநர், இப்போது அதை வெளியிட முடியவில்லை என்று உதவி கேட்டு பத்திரிகைகளுக்கு அறிக்கை அனுப்பிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலைக்குக் காரணம், அந்தப் பெயர் நடிகர் சூர்யாவைக் குறிப்பதாக இருப்பதுதான். சூர்யாவின் நிஜப் பெயர் சரவணன் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியுமோ...
தமிழ் சினிமாவில் ஒரு பொது விதி இருக்கிறது.. உயிரோடு உள்ள எந்த கலைஞரின் பெயரையும் தலைப்பாக வைக்க வேண்டும் என்றால், அவர்களின் ஆட்சேபணை இல்லா சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். பிறகுதான் அந்தத் தலைப்புக்கே அனுமதி தரப்படும்.
இப்படி ஒரு தலைப்பு வைத்தால், நிச்சயம் அது நடிகர் சூர்யாவைக் குறிக்கும் என்பது தெரிந்தும், ஆரம்பத்திலேயே அவர்களிடம் அனுமதி கேட்காமல், படத்தை எடுத்து முடித்துவிட்டு, அதை வெளியிட சிவகுமார் குடும்பம் தடையாக உள்ளது என்ற ரீதியில் அறிக்கை வெளியிடுவது பப்ளிசிட்டிக்கு வேண்டுமானால் உதவலாம். படத்துக்கு உதவாது.
இந்தப் பிரச்சினையில் சூர்யா தரப்பில் நியாயம் உள்ளது. காரணம், தன் பெயரை பயன்படுத்தி படம் எடுத்திருப்பவர் ஏற்கெனவே தன்னை சினிமாவில் நிரூபித்தவராக இருந்தால் கூட, அவர் அனுமதிக்க தயங்க மாட்டார். இந்த ராஜா சுப்பையாவோ புதியவர். எப்படி எடுத்திருப்பார்... தன் பெயரைக் கெடுத்திருப்பாரோ, மோசமான காட்சிகளை வைத்திருப்பாரோ என, முதல் நிலை நடிகரான சூர்யா யோசிப்பதில் தவறு இல்லையே!
அதுவும் ஒரு நடிகனைப் பற்றி கதை இது. அதே பெயரில் மிகப் பிரபலமாக இருக்கும் சூர்யா எப்படி இதை அனுமதிப்பார் என யோசிக்காமல் எதற்கு இப்படி தலைப்பு வைக்க வேண்டும்.. பிறகு மல்லுக்கட்ட வேண்டும்!
தலைப்பும் படமும் பிரபலமாக வேண்டும் என்பதற்காக பிரபலமாக இருப்பவரின் பயன்படுத்துவது வழக்கம்தான், ஆனால் அவர்கள் அனுமதிக்கும் பட்சத்தில்.
புதிதாக ஆர்வத்துடன் படம் பண்ண வந்தால் மட்டும்போதாது.. சில அடிப்படை விஷயங்களையும் புரிந்து கொண்டால் மட்டுமே சினிமாவில் நீடிக்க முடியும் ராஜா சுப்பையாக்கள்!
இன்னொன்று, இதுபோன்ற பிரச்சினைகள் எழாமலிருக்க ஒரு வழி... பிரபலங்களின் பெரைப் பயன்படுத்தி படத் தலைப்பைப் பதிய வரும்போதே, ஆட்சேபணை இல்லா சான்றுடன்தான் வரவேண்டும் என ஒரு புதிய கட்டுப்பாட்டை தயாரிப்பாளர் சங்கம், பிலிம் சேம்பர் அல்லது கில்டு விதிக்க வேண்டும்!