Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
'அமரர் பாலு மகேந்திராவுக்கு மனப்பூர்வமான நன்றி' - சசிகுமார்
சென்னை: தலைமுறைகள் படம் மூலம் தேசிய விருது வென்று பெருமை தேடித் தந்த அமரர் இயக்குநர் பாலு மகேந்திராவுக்கு நன்றி, என்று இயக்குநர் சசிகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சசிகுமார் தயாரிப்பில் உருவான பாலுமகேந்திராவின் 'தலைமுறைகள்' திரைப்படம் தேசிய ஒருமைப்பாட்டிற்கான சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு நர்கீஸ் தத் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைமுறைகள் திரைப்படத்தின் தயாரிப்பாளரும் அந்தப் படத்தில் கவுரவ வேடத்தில் நடித்தவருமான சசிகுமார் வெளிநாட்டில் இருப்பதால், தனது நன்றியை கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
சசிகுமார் வெளியிட்டுள்ள கடிதத்தில், "பாலு மகேந்திரா அவர்களின் இயக்கத்திலும், நடிப்பிலும் வெளிவந்த தலைமுறைகள் திரைப்படம் 2013-ஆம் ஆண்டின் தேசிய ஒருமைப்பாட்டு படத்திற்கான நர்கீஸ் தட் விருதை பெற்றிருக்கிறது.
தேசிய விருது வழங்கிய மத்திய அரசுக்கும், படத்தை தயாரிக்கக் காரணமாக இருந்த மறைந்த இயக்குநர் பாலுமகேந்திரா அவர்களுக்கும் மனப்பூர்வமான நன்றி," என்று குறிப்பிட்டுள்ளார்.