Don't Miss!
- News திருவண்ணாமலையில் "பேய்" வருதாமே.. 6 மணிக்கு வெள்ளை டிரஸ்ஸில்.. ஹைவேஸில் நிக்குதாம்.. பார்த்தீங்களா?
- Technology Moto-வின் முரட்டு போன்.. 144Hz டிஸ்பிளே, 125W சார்ஜிங், 12GB ரேம், AI Pro-Grade கேமரா.. என்ன மாடல்? என்ன விலை?
- Education இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்தில் பங்கேற்க ஆசையா...!!
- Sports IPL - சிஎஸ்கேவில் களமிறங்கிய வங்கதேச புலி.. நேற்று காயமடைந்த நிலையில், இன்று சென்னைக்கு வந்தார்
- Finance தேர்தல் பத்திரம்: தனிநபர்கள் நன்கொடை செய்த ரூ.358.91 கோடி.. முதல் இடத்தில் யார் தெரியுமா..?
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வில்லனாக நடிக்கும் சத்யராஜ்!
20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வில்லனாக நடிக்கிறார் பிரபல நடிகர் சத்யராஜ். எஸ் ஜே சூர்யாவின் இசை படத்தில் அவர் வில்லனாக நடிக்கிறார். .
வாலி, குஷி, நியூ உள்பட பல படங்களை டைரக்டு செய்த எஸ்.ஜே.சூர்யா அடுத்து, 'இசை' என்ற படத்தை எழுதி இயக்கி நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு இசையும் அவரே. இரு இசையமைப்பாளர்களைப் பற்றிய கதை இந்தப் படம்.
இந்த படத்தில், சத்யராஜ் 20 வருடங்களுக்குப்பின் மீண்டும் வில்லனாக நடிக்கிறார்.
அமைதிப்படை
இதுகுறித்து சத்யராஜ் கூறுகையில், "நான், 75 படங்களில் வில்லனாக நடித்துவிட்டுத்தான் ஹீரோவானேன். கடந்த 1994-ம் ஆண்டு வெளிவந்த 'அமைதிப்படை' படத்தில், கடைசியாக வில்லனாக நடித்தேன்.
சிவாஜி
சில வருடங்களுக்கு முன்பு 'சிவாஜி' படத்தில் வில்லனாக நடிக்கும்படி எனக்கு அழைப்பு வந்தது. அதற்கு சம்பளமாக மிகப்பெரிய தொகையைத் தருவதாகவும் சொன்னார்கள். நான்தான் நடிக்க மறுத்து விட்டேன்.
எந்திரனில்
இதேபோல் 'எந்திரன்' படத்திலும் வில்லனாக நடிப்பதற்கு அழைப்பு வந்தது. அந்த படத்திலும் நடிக்க மறுத்து விட்டேன். வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'மாஸ்' படத்திலும் வில்லனாக நடிக்க என்னை அழைத்தார்கள். மறுத்து விட்டேன். சாஹித்கபூர் கதாநாயகனாக நடிக்க, பிரபுதேவா டைரக்டு செய்யும் இந்தி படத்திலும் வில்லனாக நடிக்கும்படி கேட்டார்கள். மறுத்து விட்டேன்.
எஸ்.ஜே.சூர்யா
20 வருடங்களுக்குப்பின், எஸ்.ஜே.சூர்யா இயக்கும் 'இசை' படத்தில் வில்லனாக நடிக்கிறேன். 'சிவாஜி' படத்துக்காக எனக்கு பேசப்பட்ட சம்பளத்தில், பத்தில் ஒரு பங்கு சம்பளம் வாங்கிக்கொண்டு இந்த படத்தில் நடித்திருக்கிறேன். சம்பளமே கொடுக்காவிட்டால் கூட, 'இசை' படத்தில் நடித்திருப்பேன். அப்படி ஒரு கதையம்சமும், கதாபாத்திரமும் உள்ள படம் அது.
உலகிலேயே முதல்முறையாக
உலகிலேயே எந்த நடிகரும் நடித்திராத ஒரு வில்லன் கதாபாத்திரத்தில், நான் நடித்து இருக்கிறேன். அதற்காக பெருமைப்படுகிறேன். எஸ்.ஜே.சூர்யா, மிக திறமையான இயக்குநர். 'இசை' படம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தும்,'' என்றார்.