Don't Miss!
- News பள்ளிக்கரணை ஆணவக் கொலையால் இறந்த கணவன்.. துக்கம் தாளாமல் விஷம் குடித்து தற்கொலை செய்த மனைவி
- Automobiles இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மறைந்த இயக்குநர் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிதி உதவி கொடுத்த எஸ்.வி.சேகர்
நினைவில் நின்றவள் திரைப்படத்தின் இயக்குநர் அகத்திய பாரதி புற்று நோய் காரணமாக மரணம் அடைந்து விட்டார். அவருடைய இரண்டு மகள்களுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் அவர்களின் கல்வி உதவித் தொகையாக வழங்கியுள்ளார் எஸ்.வி.சேகர்.
கருணை கொலையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். நினைவில் நின்றவள். எஸ்.வி.சேகரின் மகன் அஸ்வின் சேகர் நடித்துள்ள இந்த படத்தில் படத்தில் கீர்த்தி சாவ்லா, காயத்ரி ஆகியோர் நடித்துள்ளனர்.
கே.மணிகண்டன் குமரவேல், டாக்டர் சித்ரலட்சுமி குமரவேல் ஆகிய இருவரும் நினைவில் நின்றவள் படத்தை தயாரித்து இருக்கிறார்கள். இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் கதை,திரைக்கதை வசனகர்த்தா மற்றும் இயக்குனரருமான அகத்திய பாரதி புற்றுநோயில் மரணமடைந்துவிட்டார்.
இந்த நிலையில் சமீபத்தில் நின்றவள் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது மறைந்த அகத்திய பாரதி அவர்களின் இரண்டு மகள்களுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் அவர்களின் கல்வி உதவித் தொகையாக எஸ்.வி.சேகர் வழங்கினார்.