Don't Miss!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Automobiles எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- Finance லண்டனில் டும் டும் டும்? லொகேஷன்-ஐ மாற்றிய ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட்..!!
- Technology Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடுகள்.. இலவசமாக Display-வை மாற்றுவது எப்படி?
- News சித்ரா பவுர்ணமி 2024: சென்னை டூ திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கம்
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அம்மா, பாட்டி வேஷத்துக்குக் கூட தமிழ் நடிகைகளைப் புறக்கணிக்கிறார்களே!- சவுகார் ஜானகி
சென்னை: தமிழ் சினிமாவில் அம்மா, பாட்டி வேடங்களுக்குக் கூட மும்பையிலிருந்துதான் நடிகைகளை வரவழைக்கிறார்கள். தமிழ் நடிகைகளைப் புறக்கணிக்கிறார்கள், என்றார் நடிகை சவுகார் ஜானகி.
சென்னையில் நேற்று நடந்த வானவராயன் வல்லவராயன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று சவுகார் ஜானகி பேசுகையில், "11 வருடங்கள் கழித்து நான் நடிக்க வந்து இருக்கிறேன். அந்த காலத்தில் இதுபோன்ற பாடல் வெளியீட்டு விழாக்கள் எல்லாம் கிடையாது. இப்போது சினிமாவே மாறிவிட்டது.
தமிழ் பட உலகில் கதாநாயகி வேடத்துக்கு மும்பையில் இருந்து நடிகைகளை வரவழைக்கிறார்கள். அது சரிதான். ஆனால் அம்மா, பாட்டி வேடங்களுக்கு கூட, மும்பையில் இருந்து நடிகைகளை வரவழைப்பது வேதனையாக இருக்கிறது.
நான் நடித்த 'சவுகார்' படத்தை தயாரித்த நிறுவனம் ஒரு புதிய படம் தயாரித்தார்கள். அந்த பட பூஜையில் குத்துவிளக்கு ஏற்றுவதற்கு என்னைத்தான் அழைத்தார்கள்.
ஆனால் நடிப்பதற்கு என்னை அழைக்கவில்லை. மும்பையில் இருந்துதான் ஒரு நடிகையை வரவழைத்து நடிக்க வைத்தார்கள்,'' என்றார்.