Don't Miss!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
உங்க வாய்ப்பெல்லாம் சிவகார்த்திகேயனுக்குப் போகுதாமே!- தனுஷை ஏற்றிவிட்ட நாரதர்கள்!
காரணம் இருவருக்குமிடையிலான நட்பில் விழுந்த விரிசல்தான் என்கிறார்கள்.
கலக்கப் போவது யார் நிகழ்ச்சியில் அறிமுகமாகி, டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக கலக்கிய சிவகார்த்திகேயன் மெரினாவில் முக்கிய பாத்திரத்தில் அறிமுகமானார்.
அடுத்து தனுஷுடன் 3 படத்தில் நடித்தார். மனம் கொத்திப் பறவையில் தனி ஹீரோவாக வந்தார். ஆனால் இந்த மூன்று படங்களிலும் அவருக்குக் கிடைக்காத வெற்றி, தனுஷ் தயாரித்த எதிர்நீச்சலில் கிடைத்தது.
இருவரும் அண்ணன் - தம்பி எனும் அளவுக்கு பழகி வந்தனர். தனுஷ் வெளியில் சிவகார்த்திகேயனை தன் தம்பி என்றுதான் கூறுவார்.
கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் என தொடர்ந்து இந்த ஆண்டு ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
ஒருபுறம் சிவகார்த்திகேயன் வேகமாக வளர, அவரை வளர்த்துவிட்ட தனுஷின் நிலையோ இறங்குமுகமாகத்தான் உள்ளது. இந்த ஆண்டில் தனுஷ் நடித்து வெளிவந்த மரியான், நய்யாண்டி இரண்டு படங்களுமே மாபெரும் தோல்விப் படங்களாக அமைந்தன.
முன்பு சிவகார்த்திகேயன் படத்தில் கவுரவ வேடத்தில் வந்து தனுஷ் புரமோட் பண்ணார். இப்போது நிலைமை தலைகீழ். தனுஷின் அடுத்த படமான வேலையில்லா பட்டதாரியில் கவுரவ வேடத்தில் வந்து தனுஷுக்கு பப்ளிசிட்டி தர வேண்டிய அளவுக்கு வளர்ந்துவிட்டார் சிவகார்த்திகேயன்.
இதை தனுஷிடம் ஓதும் விதத்தில் ஓதி, புகைச்சலைக் கிளப்பியுள்ளார்களாம் கோடம்பாக்க நாரதர்கள். 'உங்களுக்கு வரவேண்டிய கதைகள்தான் இப்போது சிவகார்த்திகேயன் நடிப்பது. நீங்களே உங்களுக்கு போட்டியாக ஒருத்தரை உருவாக்கிட்டீங்களே.. சினிமாவில் இந்த விஷயத்தில் சொந்தத் தம்பியாகவே இருந்தாலும் உஷாரா இருக்கணும்,' என்று சொல்லிவைத்திருக்கிறார்கள்.
விளைவு, தனுஷ்-சிவகார்த்திகேயன் நட்பில் பிளவை உண்டாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
தனுஷ், சிவகார்த்திகேயனை வைத்து மீண்டும் ஒரு படம் தயாரிக்க இருந்தார். இப்போது அதுபற்றி எந்த இறுதி முடிவும் எடுக்காமல் உள்ளாராம்.