Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
உதயநிதியிடமிருந்து விலகினார் எஸ்.ஆர். பிரபாகரன்... அடுத்த படம் அறிவிப்பு!
சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல் படங்களைத் தந்த எஸ் ஆர் பிரபாகரன், தன் அடுத்த படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்துக்குச் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.
சுந்தரபாண்டியனுக்குப் பிறகு, உதயநிதி - நயன்தாராவை வைத்து இது கதிர்வேலன் காதல் படத்தை இயக்கினார் எஸ் ஆர் பிரபாகரன்.
இந்தப் படம் வெளியான பிறகு, மீண்டும் உதயநிதி - எஸ் ஆர் பிரபாகரன் இணைந்து படம் பண்ணப் போவதாக அறிவித்தனர். இந்தப் படத்தில் லட்சுமி மேனன் உதயநிதிக்கு ஜோடியாக ஒப்பந்தமானார். இந்தப் படத்துக்காக தனது தேதிகளை மொத்தமாக ஒதுக்கிக் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் எஸ் ஆர் பிரபாகரன், உதயநிதி படத்திலிருந்து விலகியுள்ளார். கதை விஷயத்தில் இருவருக்கும் இணக்கமான சூழல் உருவாகாததால் இந்த பிரிவு என்று கூறப்படுகிறது.
இப்போது, தன் அடுத்த படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்துக்கு செய்யப் போவதாகவும், நடிகர் நடிகைகள் உள்ளிட்ட பிற விவரங்களை விரைவில் அறிவிப்பதாகவும் எஸ் ஆர் பிரபாகரன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.