Don't Miss!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
பெங்களூரில் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி ஒரு வகையாக சமாளித்த சூர்யா
பெங்களூர்: விளம்பர படத்தில் நடிக்க பெங்களூர் வந்த சூர்யா ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிக் கொண்டார். நடிகர் சூர்யா விளம்பரப்படம் ஒன்றில் நடிக்க யாருக்கும் தெரியாமல் ரகசியமாக பெங்களூர் வந்தார். பெங்களூர் அரண்மனையில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அங்கு சூர்யா நடித்துக் கொண்டிருக்கும் செய்தி தீயாக ஊர் முழுவதும் பரவியது. விளைவு ரசிகர், ரசிககைகள் அங்கு வந்து குவிந்துவிட்டனர்.
புகைப்படம்
தன்னுடன் புகைப்படம் எடுக்க விரும்பியவர்களுக்கு சூர்யா போஸ் கொடுத்தார். அவர்களும் சந்தோஷமாக புகைப்படம் எடுத்துச் சென்றனர்.
மொய்ப்பு
ரசிகர்கள் சூர்யாவை மொய்த்தபோது அவர் கூறுகையில், முதலில் ரசிகைகள் புகைப்படம் எடுத்துக் கொண்டு செல்லட்டும் அதன் பிறகு ரசிகர்கள் அனைவருடனும் நின்று புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறேன் என்றார்.
பெங்களூர்
நான் அண்மையில் பெங்களூர் வந்தது இல்லை. அயன் படப்பிடிப்புக்காக கடைசியாக இங்கு வந்தது. எனக்கு இந்த ஊரின் கிளைமேட் பிடிக்கும் என்றார் சூர்யா.
மாஸ்
வெங்கட் பிரபுவுடன் வேலை செய்வது மகிழ்ச்சியாக உள்ளது. அவரது படங்களை நான் ரசித்து பார்த்துள்ளேன். இந்த படமும் நல்ல அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று கூறினார் சூர்யா.
பாலிவுட்
பாலிவுட் சென்றது ஒரு முறை அவுட்டிங். எனக்கு இங்கு உள்ள படங்கள், ரசிகர்கள் போதும். இதைவிட்டு நான் ஏன் எங்காவது செல்ல வேண்டும் என்று கேட்டார் சூர்யா.