Don't Miss!
- News படத்துல 8 முயல்கள் இருக்கு! எங்க இருக்குனு கேட்காதீங்க! அத நீங்கள்தான் கண்டுபிடிக்கணும்!
- Sports என்னங்க இது.. இளம் வீரர்களை கதி கலங்க வைத்த தோனி STATS.. 42 வயதிலும் உலகின் சிறந்த ஃபினிஷர்
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்குனு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
பாலு மகேந்திராவுக்கு அஞ்சலி - இன்றைய படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து!
சென்னை: மறைந்த இயக்குநர் பாலு மகேந்திராவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்றைய படப்பிடிப்புகள் அனைத்தையும் ரத்து செய்துள்ளது தமிழ் திரையுலகம்.
தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம் மற்றும் பெப்ஸி போன்ற அமைப்புகள் கூட்டாக இதனை அறிவித்துள்ளன.
தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்பாளியான பாலு மகேந்திரா நேற்று மரணத்தைத் தழுவினார்.
இதைத் தொடர்ந்து, தமிழ் திரையுலகமே திரண்டுவந்து அவருக்கு அஞ்சலி செலுத்தியது. இன்று பிற்பகல் 2 மணிக்கு அவர் உடல் போரூரில் தகனம் செய்யப்படுகிறது.
ஒரு நாள் படப்பிடிப்புகள் ரத்து
தமிழ் சினிமாவுக்கு பல கவுரவங்களைத் தேடித் தந்த படைப்பாளியான பாலு மகேந்திராவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்று ஒரு நாள் அனைத்துப் படப்பிடிப்புகளையும் ரத்து செய்வதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் அறிவித்தார்.
தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், பெப்சி தலைவர் அமீர் ஆகியோரும் இதே அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.