Don't Miss!
- Finance கச்சா எண்ணெய் விலை தடாலடி உயர்வு.. பணவீக்கத்திற்கு வேட்டு, ரெப்போ விகிதம் குறைவது கடினம்..!!
- News கடையில் கைவரிசை! ரூ.13,000க்காக இந்தியாவின் மானத்தை வாங்கிய மாணவிகள்.. அமெரிக்க போலீஸ் கொடுத்த ஷாக்
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தயாரிப்பாளர் சங்கத்தில் உச்சகட்ட மோதல்.. வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கத் தடை!
சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் நாளுக்கு நாள் வலுத்து வந்த மோதல், இப்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
கேயார் தலைமையிலான நிர்வாகிகளுக்கும் சங்கத்தின் பொருளாளருக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக, கவுன்சிலின் வங்கிக் கணக்கை கிட்டத்தட்ட முடக்கி வைத்துள்ளது உயர் நீதிமன்றம்.
தயாரிப்பாளர்களின் நலன் காக்க என்று கூறி ஆரம்பிக்கப்பட்டது தயாரிப்பாளர் சங்கம். ஆனால் இந்த சங்கத்தின் நிர்வாகத்தில் இருப்பவர்களோ படமே தயாரிக்காத முன்னாள் தயாரிப்பாளர்கள்.
ஏகப்பட்ட அரசியல் பிரச்சினைகள், உள்ளடி வேலைகள் அரங்கேறும் இடமாக தயாரிப்பாளர் சங்கம் மாறிவிட்டது.
கடந்த முறை எஸ் ஏ சந்திரசேகரன், தாணு கோஷ்டி பதவியில் இருந்த இரண்டு ஆண்டுகளும், கேயார் - சிவா தினம் ஒரு வழக்கு, பஞ்சாயத்து, போட்டி பிரஸ் மீட் என நடத்திக் கொண்டிருந்தார்கள்.
இந்த முறை பதவிக்கு வந்த கேயார் - சிவா கோஷ்டியை, விட்டேனா பார் என தாணு அணி நீதிமன்றங்களுக்கு இழுத்துக் கொண்டிருக்கிறது.
இதற்கு நடுவில், சின்னப் படத் தயாரிப்பாளர்களின் பிரதிநிதியான ஆர் ராதாகிருஷ்ணன், தனி ட்ராக்கில் ஒரு பிரச்சினையை உருவாக்கி வைத்துள்ளார்.
இவர்தான் சங்கத்தின் பொருளாளர். ஆரம்பத்தில் கேயார் அணியில் இருந்தவர், இப்போது கேயார் அணிக்கு மெயின் வில்லனாகிவிட்டார். இதனால் இவரது கையெழுத்தில்லாமல் சங்கத்தின் செலவுகளுக்கு நயா பைசா எடுக்க முடியவில்லை வங்கியிலிருந்து.
எனவே ராதாகிருஷ்ணன் கையெழுத்து இல்லாமலேயே காசோலைகளில் தாங்கள் கையெழுத்திட்டு பணம் எடுக்க வகை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் கேயார் அணி வழக்கு தொடர, அதை எதிர்த்து பதில் வழக்கு தொடர்ந்தால் ராதாகிருஷ்ணன்.
அதில், "சென்னை ஆயிரம் விளக்கு இந்தியன் வங்கி கிளையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலின் கணக்கு உள்ளது. இந்த வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க வேண்டும் என்றால் கவுன்சிலின் பொருளாளரின் கையொப்பம் அவசியம் தேவை. ஆனால் தற்போது இந்த கவுன்சிலின் நிர்வாகிகளாக இருப்பவர்கள், பொருளாளரின் கையொப்பம் இல்லாமலேயே வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முயற்சிக்கின்றனர். எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும்," என்று கேட்டுக் கொண்டார்.
ராதாகிருஷ்ணன் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சிலம்பரசன், 'தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலின் விதி 23(இ)-யின்படி, கவுன்சில் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கவேண்டும் என்றால் அதற்குரிய காசோலையில் பொருளாளர் கையெழுத்து அவசியமாகும். ஆனால், பொருளாளர் கையெழுத்து இல்லாமல் கவுன்சில் நிர்வாகிகள் பணத்தை எடுக்க முயற்சிக்கின்றனர் என்று வாதிட்டார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி தமிழ்வாணன்,"மனுதாரரின் கோரிக்கைக்கு ஆரம்பக்கட்ட முகாந்திரம் உள்ளது என்று முடிவு செய்து, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் நிர்வாகிகள், கவுன்சிலின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்க வருகிற 20-ந்தேதி வரை தடை விதிக்கிறேன்," என்று உத்தரவிட்டார்.
இன்னொரு பக்கம் சங்கத் தலைவர் கேயார் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளார் தாணு. அதை ஏப்ரல் 10-ம் தேதிக்குள் பொதுக்குழுவை கூட்டி தோற்கடிக்காவிட்டால் கேயார் பதவிக்கு ஆபத்து என்பது குறிப்பிடத்தக்கது.
-
என்ன இவ்ளோ செக்சியா இருக்கு.. என்னால் பாட முடியாது.. பாக்யராஜுக்கு கண்டிஷன் போட்ட இளையராஜா
-
சங்கீதாவுக்கு அண்ணன்களால் இப்படியெல்லாம் கஷ்டம் நேர்ந்திருக்கா.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!
-
உத்தம வில்லன் படத்தால் பேரிழப்பு.. கொடுத்த வாக்கை இன்னும் கமல்ஹாசன் காப்பாத்தல.. லிங்குசாமி ஆதங்கம்!