Don't Miss!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கத்தி படத்தை வெளியிடக் கூடாது - விநியோகஸ்தர் சங்கத்தில் புகார் தரும் மாணவர் அமைப்பு
சென்னை: ராஜபக்சேவின் தொழில் கூட்டாளியான லைக்கா மொபைல் நிறுவனம் தயாரித்து, விஜய் நடித்துள்ள கத்தி படத்தை வெளியிடக் கூடாது எனக் கூறி மாணவர் அமைப்பு விநியோகஸ்தர்களிடம் புகார் தர முடிவு செய்துள்ளது.
விஜய் நடிப்பில், ஏ ஆர் முருகதாஸ் இயக்கியுள்ள படம் கத்தி.
இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்தே பெரும் சர்ச்சை மற்றும் எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது.
காரணம் அதன் தயாரிப்பாளர்கள். இந்தப் படத்தை முதலில் தயாரிப்பதாக அறிவித்தது அய்ங்கரன் நிறுவனம். பின்னர் லைக்கா மொபைல் நிறுவனம் அவர்களுடன் கைகோர்த்தது. பின்னர் அய்ங்கரன் துணையுடன் முற்று முழுதாக லைக்கா மொபைல் நிறுவனமே கத்தி படத்தைத் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு வந்ததிலிருந்தே படத்துக்கு எதிரான கோஷங்கள் கிளம்பிவிட்டன. தமிழினப் படுகொலை செய்த ராஜபக்சேவின் கூட்டாளிகளான லைக்கா மொபைல்காரர்கள் தயாரிக்கும் படத்தில் விஜய் நடிப்பதா என்ற எதிர்க்குரல்கள் பலமாக ஒலித்தாலும், அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் படத்தை இயக்கினார் முருகதாஸ்.
மேலும் இந்த நிறுவனத்துக்காக படங்கள் இயக்க தமிழ் சினிமாவில் ஆள்பிடிக்கும் வேலையையும் அவர் செய்வதாக புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில், லைக்கா மொபைல் நிறுவனத்தினரின் குடும்ப நிகழ்ச்சிக்கும் சத்தமின்றி போய் வந்திருக்கிறார் படத்தின் ஹீரோ விஜய்.
இப்போது, படத்தை உலகின் எந்தப் பகுதியிலும் வெளியிடவே கூடாது எனக் கூறி மாணவர் அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
முதல் கட்டமாக வரும் செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினரை சந்தித்து சிங்கள இனவேறியர்களின் பணத்தில் விஐய் நடிக்கும் கத்தி திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று அறிவுறுத்தப் போவதாக முற்போக்கு மாணவர் முன்னணி என்ற அமைப்பு அறிவித்துள்ளது.