Don't Miss!
- News எதிர் எதிர் துருவம்.. சர்ப்ரைஸ் மீட்டிங்.. நேருக்கு நேர் சந்தித்து அளவளாவிய தமிழிசை - பிரேமலதா!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்ப தலைவரிடம் இந்த 6 குணங்கள் இருக்கணுமாம்...அப்பதான் குடும்பம் நல்லா இருக்கும்
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
‘போதுமான தியேட்டர்கள் இல்லை’ என்ற வார்த்தையைக் கேட்டாலே... ‘தங்க மீன்கள்’ ராமின் கடிதம்!
சென்னை: சிலபலக் காரணங்களால் அறிவிக்கப்பட்ட தேதியில் ரிலீசாகாமல் தள்ளிப் போனது ஜிகிர்தண்டா படம். இதுதொடர்பாக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் கிசுகிசுக்கப் படுகின்றன.
இதே போல், கடந்தாண்டு தனது தங்கமீன்கள் படத்துக்கும் இதே போன்ற பிரச்சினையை சந்தித்தார் இயக்குநர் ராம். போதிய தியேட்டர் கிடைக்காமல் தாமதமாக ரிலீஸ் ஆன தங்கமீன்கள் தேசிய விருதை தட்டிச் சென்றது வேறுகதை.
இந்நிலையில், ஜிகிர்தண்டா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜூக்கு தனது பேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பாக கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் ராம். அதில், தான் பட்ட வேதனைகளை முன்னுதாரணமாகக் கூறி, கார்த்திக் சுப்புராஜூக்கு அவர் ஆறுதல் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மேலும், அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிற்கு...
தங்களின் படம் "ஜிகர்தண்டா" அறிவித்த தேதியில் இருந்து (ஜீலை 25) அடுத்த வாரத்திற்கு தள்ளிப்போவதாக இப்போதுதான் கேள்விபட்டேன்.
தங்கமீன்கள்....
தங்கமீன்கள் வெளிவருவதாக தினசரி இதழ்களில் விளம்பரம் வந்த தேதி ஜீலை 26, போன வருடம். ஆனால் அதுவும் தள்ளிப் போனது. இறுதியில் ஆகஸ்ட் 30ல் திரைக்கு வந்தது.
நானும் அனுபவித்தேன்...
தின செய்தித்தாள்களில் தேதியிட்டு விளம்பரம் வந்தபின் ஊடகங்களுக்கு அளிக்கும் பேட்டிகளில் சொன்ன தேதி சொன்ன நேரம் வந்து சேரும் என்று நாம் சொல்லிய பின் தேதி மாறினால் எத்தனை மனவருத்தம் ஏற்படும் என்பதையும் அது எத்தனை பெரிய சுமையாய் அழுத்தும் என்பதையும் போன வருடம் இதே நாட்களில் நான் உணர்ந்தேன். அனுபவித்தேன்.
எரிச்சல் கதைகள்...
ஏன் தள்ளிப் போனது என்பதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையை சொல்லச் சொல்ல என்ன எரிச்சல் ஏற்படும் என்பதையும் கண்டுணர்ந்தேன்.
சாதனையாக மாறும்...
இன்றைய உங்களின் இரவு எப்படி இருக்கும் என்பதை என்னால் உணர முடிகிறது. கவலைப்படாதீர்கள், தடைகளை தாண்டி பெருகிற வெற்றி பெரிய வெற்றியாக இருக்கும். சாதனையாக மாறும்.
வாழ்த்துக்கள்...
உங்களின் "பீட்சா" இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதற்கும் என் வாழ்த்துக்கள்.
உங்கள் ஜிகிர்தண்டா...
மதுரைக்கு ஜிகர்தண்டா எப்படியோ அப்படி தமிழ் சினிமாவிற்கு உங்கள் ஜிகர்தண்டா இருக்கும் என நான் நம்புகிறேன்' என இவ்வாறு அக்கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
பிரியங்களுடன் ராம்...
தன் கடிதத்தின் கீழே அடைப்பு குறிக்குள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் ராம்.
('போதுமான திரையரங்குகள் கிடைக்கவில்லை', என்ற வார்த்தையைக் கேட்டாலே பத்திகிட்டு வருது. எப்பத்தான் மாறுமோ? )
-
இதனால் தான் ஷங்கர் மகள் திருமணத்துக்கு தீபிகா படுகோன் வரலையா?.. திடீரென டிரெண்டாகும் புகைப்படம்!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!