Don't Miss!
- News எதிர் எதிர் துருவம்.. சர்ப்ரைஸ் மீட்டிங்.. நேருக்கு நேர் சந்தித்து அளவளாவிய தமிழிசை - பிரேமலதா!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்ப தலைவரிடம் இந்த 6 குணங்கள் இருக்கணுமாம்...அப்பதான் குடும்பம் நல்லா இருக்கும்
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விஷால், சந்தானத்திற்கு வந்த மிரட்டல் கடிதத்தில் எழுதியிருந்தது என்ன?
சென்னை: விஷால், சந்தானம், நாசர் ஆகியோருக்கு வந்த மொட்டை மிரட்டல் கடிதங்களில் என்ன எழுதியிருந்தது என்பது தெரிய வந்துள்ளது.
நடிகர்கள் விஷால், சந்தானம், நாசர் ஆகியோருக்கு பெயர், முகவரி இல்லாத மிரட்டல் கடிதங்கள் வந்தன என்று செய்திகள் வெளியாகின. அந்த கடிதங்கள் நடிகர் சங்க உறுப்பினர்கள் எழுதியது போல் இருந்தன என்று கூறப்பட்டது.
இந்நிலையில் அந்த கடிதங்களின் நகல்கள் கிடைத்துள்ளன.
விஷால்
விஷாலுக்கு வந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, பிழைப்பு தேடி ஆந்திராவை விட்டு ஓடி வந்து தமிழ்நாட்டில் ஒண்டியது மட்டும் அல்லாமல் சூப்பர் ஸ்டார் ஆகவும் கனவு காண்கிறாய். அது தப்பல்ல. ஆனால் நடிகர் சங்கத்தில் குழப்பம் விளைவிப்பது தான் எங்களால் தாங்க முடியவில்லை.
சொந்த விஷயம்
உன் சொந்த விஷயத்தை கையாள முடியாமல் பயந்து போய் பின் வாசல் வழியாக உள்ளே வந்து சிங்கத்தை சீண்டப் பார்க்கிறாய். உன் சொந்த விவகாரங்களுக்கு நடிகர் சங்கம் பலியாக வேண்டுமா?
வந்தாய், ஒண்டினாய்
சங்கத்தின் நலனுக்காக உங்களை வேரோடு பிடுங்கி எறிவதே எங்கள் எண்ணம். வந்தாய், ஒண்டினாய், ஏதோ சொந்த படம் எடுத்து கதாநாயகனாக இருக்கிறாய். அத்தோடு இருந்து கொள். திரும்பவும் ஆந்திரா பக்கம் போவதற்கான வழியை தேட வைத்துக் கொள்ளாதே. மற்றவரின் பின் வாசல் வழியாக நுழைந்து கொள்ளையடிக்க நினைக்காதே. அப்படி நினைத்தால் நிரந்தரமாக பாலா படத்தில் வந்தது போல் இருக்க வேண்டி இருக்கும் என்று விஷாலுக்கு வந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தானம்
சந்தானத்திற்கு வந்த மிரட்டல் கடிதத்தில் கூறியிருப்பதாவது, ஏதோ மக்கள் ஏமாந்தர்கள் என்று நீ காலம் ஓட்டுகிறாய். இந்த வீணாய் போன நாசரோடு சேர்ந்து கொண்டு கூச்சல் போடுகிறாயா? உனக்கு எதுக்கு இந்த வீண் வேலை?
ஆனானப்பட்ட வடிவேலுவே
ஆனானப்பட்ட வடிவேலுவே ஓரங்கட்டப்பட்டார். நீ எம்மாத்திரம். சங்கத்தின் சரித்திரம் என்ன? அது வளர்ந்த விதமென்ன? யார் வளர்த்தார்கள்? எப்படி வளர்த்தார்கள்? என்று தெரியாமல் தெருவோடு போகிற நாய்களோடு சேர்ந்து கொண்டு குரைப்பதை நிறுத்திக் கொள். காமெடியனுக்கு குரல் தான் முக்கியம்.
குரைக்காதே
அந்த குரலை உன் பிழைப்புக்காக மட்டுமே பயன்படுத்து. சங்கம் என்கிற சூரியனைப் பார்த்து குரைக்க பயன்படுத்தாதே என்று அந்த கடித்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாசர்
நாசருக்கு வந்த மிரட்டல் கடிதத்தில், நடிகர் சங்கத்தின் பாரம்பரியம், அருமை, சரித்திரம் இதை பற்றி தெரியாமல் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் மீது அபாண்டமாக பழி சுமத்தி குடும்பமாக வாழ்ந்து வந்த சங்க அங்கத்தினர்களை பிரிக்கப் பார்க்கிறாய். உனக்கு பின்னால் யார் இருக்கிறார்கள்? உனக்கு அந்த தைரியம் இல்லை என்பது எங்களுக்கு தெரியும்.
சிவக்குமார், சூர்யா
எங்கள் தலைவரையும் பொதுச் செயலாளரையும் பார்த்து நடிகர் சங்கம் என்ன குடும்பச் சொத்தா என்று கேட்டார்களே? உன்னோடு சேர்ந்து கொண்டு சிவக்குமார் அண்ணனும், சூர்யாவும், கார்த்தியும் தீவிரமாக காய் நகர்த்துகிறார்களே? அவர்கள் குடும்பச் சொத்தாக மாற்றிக் கொள்வதற்காகவா?
குமரிமுத்து
நடிகர் சங்கத்தை காட்டிக் கொடுக்க நினைத்த ஒன்னரை கண்ணன் குமரிமுத்துவுக்கு குரல் கொடுத்தீர்களே அவன் செய்த காரியம் தெரியுமா? நீ எங்கள் தலைவர் இருந்த இடத்தில் இருந்திருந்தால் அதையே தான் செய்திருப்பாய்.
திடீர் வீரம், அக்கறை
உனக்கு ஹீரோவாகும் தகுதியில்லை. பிழைப்புக்காக மாநிலம் விட்டு மாநிலம் தாவி பிச்சை எடுக்கிறாய். உனக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தில் என்ன உரிமையிருக்கிறது. திடீரென்று எங்கிருந்து வந்தது உனக்கு இந்த வீரம், இந்த அக்கறை?
சங்கம்
எங்கள் சங்கத்தை எங்களுக்கு நடத்திக் கொள்ளத் தெரியும். நீ போய் ஊர் ஊராய் பிச்சைப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அலை. உனக்கு அதற்கே நேரம் பத்தாது. மேலும் தென்னிந்திய நடிகர் சங்கத்தை பற்றி கேள்வி கேட்டாலோ, குரல் எழுப்பினாலோ பாத்திரம் ஏந்த முடியாமல் போரும். தேவர் மகனில் வடிவேல் சொன்ன வசனம் ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறோம். நீ நல்ல நடிகன். நீ அதில் மட்டுமே கவனம் செலுத்துவது உனக்கும் நல்லது, சங்கத்திற்கும் நல்லது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.