Don't Miss!
- News மஞ்சள் கலர் கல்யாண பத்திரிகை.. நாட்டை "ராவணன்" ஆண்டால் என்ன? பொண்ணு பேர் பார்த்தீங்களா? சபாஷ் நெல்லை
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தமிழ் சமுதாயத்தை வணங்கி நன்றி சொல்கிறேன் - வைரமுத்து
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ட்டுள்ளது.
கலை, இலக்கிய பணிகளுக்காக பத்மபூஷண் விருது எனக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது தேசிய அளவில் ஆளுமைமிக்க ஓர் அங்கீகாரமாகும். இந்த விருது பெறுவதன் மூலம் அது தருகிற மகிழ்ச்சியை நான் மறைக்க விரும்பவில்லை. மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்.
நீண்ட பயணத்தில் நெல்லிச்சாறு போல இனி ஆற்றவிருக்கும் பணிகளுக்கு இது ஊட்டமும், உற்சாகமும் தரும் என்று நம்புகிறேன்.
இது இட்டுகொள்வதற்கான பட்டம் அல்ல, பெற்றுக்கொள்வதற்கான விருது என்று புரிந்து கொள்கிறேன். விருது என்பது பயணத்தின் முடிவல்ல, பயணப்பாதையில் இளைப்பாறி கொள்ளும் ஒரு பாலைவன சோலை, சற்றே இளைப்பாறிவிட்டு இன்னும் விரைந்து ஓடுவேன்.
கலை இலக்கியத்தின் வழியே மனிதகுல மேம்பாடு என்ற குறிக்கோளை தொடுவேன். இந்த ஆண்டு பத்ம விருது பெற்ற பெருமக்களை எல்லாம் வாழ்த்துகிறேன். என்னை இந்த விருதுக்கு முன்னெடுத்து சென்ற தமிழ் சமுதாயத்தை வணங்கி நன்றி சொல்கிறேன் என்று கூறியுள்ளார் வைரமுத்து.