Don't Miss!
- News ஒரு ஓட்டுக்காக போராடிய "சர்க்கார்" விஜய் நிலையா இது.. கட்சி தலைவரான முதல் தேர்தலிலேயே ஏமாற்றம்
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நயனதாரா நடித்த ஸ்ரீராமராஜ்யம் பட இயக்குநர் பாபு காலமானார்
சென்னை: பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் பாபு (வயது 81) மாரடைப்பால் காலமானார் அவருக்கு வயது 80.
1933-ம் ஆண்டு பிறந்த பாபுவின் இயற்பெயர் சத்திராஜு லக்ஷ்மி நாராயணா. திரையுலகில் இவரை அனைவரும் பாபு என்று அழைத்தனர். இவருக்கு பானுமதி என்ற மகளும், வேணுகோபால், வெங்கட்ரமணன் என்ற 2 மகன்களும் உள்ளனர்.
என்.டி.ராமாராவ், சிரஞ்சீவி, நாகேஷ்வர ராவ், அனில்கபூர், ஸ்ரீகாந்த் உட்பட பல முன்னணி நடிகர்களை இயக்கிய பாபு, தமிழில் 'நீதி தேவன் மயங்குகிறான்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.
பாலகிருஷ்ணா, நயன்தாரா ஆகியோரின் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'ஸ்ரீராம ராஜ்யம்'உட்பட 51 படங்களை அவர் இயக்கியுள்ளார்.
2013-ம் ஆண்டில் பத்மஸ்ரீவிருது, ஆந்திர பல்கலைக்கழகம் வழங்கிய கலா பிரபூர்ணா விருது உட்பட பல விருதுகளை அவர் பெற்றுள்ளார்.
உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் ஞாயிற்றுக்கிழமை மாலை மாரடைப்பால் காலமானார். இவரது மறைவுக்கு தெலுங்கு திரை உலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஏராளமான நடிகர், நடிகையர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பாபுவின் மறைவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.