Don't Miss!
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- News பெங்களூர், ஹைதராபாத்திற்கு அதிர்ச்சி.. 1 வருடத்தில் தட்டி தூக்கிய சென்னை.. இதுதான் உண்மையான வளர்ச்சி
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
டைரக்ஷனுக்குத்தான் முதலிடம்... சுசீந்திரன் படத்திலிருந்து விலகினார் விஜய் மில்டன்!
'வெண்ணிலா கபடி குழு படத்தை இயக்கிய சுசீந்திரன் அடுத்து வீர தீர சூரன் என்கிற படத்தை இயக்குகிறார். இப்படத்தில் விஷ்ணு நாயகனாகவும், ஸ்ரீதிவ்யா நாயகியாகவும் நடிக்கின்றனர்.
இப்படத்தின் ஒளிப்பதிவாளராக நியமிக்கப்பட்டவர் விஜய் மில்டன். இப்போது திடீரென படத்திலிருந்து விலகிக் கொள்வதாகக் கூறி வெளி வந்துவிட்டார்.
இதில் அதிர்ந்து போன சுசீந்திரன், பிறகு வேறு வழியில்லாமல் விஜய் மில்டனுக்கு பதிலாக இப்போது மதியை ஒளிப்பதிவாளராக நியமித்துள்ளார்.
சமீபத்தில் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான கோலி சோடா பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பலனாக படங்கள் இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பெரிய நடிகர்கள் படம் பண்ண அழைப்பதால், இனி ஒளிப்பதிவு பொறுப்பை நிறுத்திக் கொள்ளலாம் என முடிவு செய்துள்ளாராம் விஜய் மில்டன்.
விஜய் மில்டன் சொன்ன ஒரு கதை நடிகர் விக்ரமுக்குப் பிடித்துப் போனதால் உடனடியாக கால்ஷீட் தந்துவிட்டாராம். ஐ முடிந்த பிறகு இந்தப் படத்தைப் பண்ணலாம் என உறுதியளித்துள்ளாராம்.