Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சரித்திரப் பின்னணியில் உருவாகும் விஜய்யின் 58வது படம்!
சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகும் விஜய்யின் 58வது படம் குறித்து புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்தப் படம் கற்பனை சரித்திரப் பின்னணியில் உருவாகிறது என்பது முதல் தகவல். அந்த வகையில் விஜய் நடிக்கும் முதல் சரித்திரப் படம் இது எனலாம்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு நேரடித் தமிழ்ப் படத்தில் நடிக்கிறார் ஸ்ரீதேவி. இதில் ஒரு சமஸ்தானத்தின் ராணியாக வருகிறார் ஸ்ரீதேவி. அந்த சமஸ்தானம் ஆபத்தில் சிக்கும் தருணத்தில், காப்பாற்றும் வீரனாக வருகிறாராம் விஜய்.
இந்தப் படத்தில் இன்னொரு சிறப்பு நான் ஈ புகழ் கிச்சா சுதீப் முக்கிய வேடத்தில், அதாவது விஜய்யின் குருவாக நடிக்கிறாராம்.
நாயகியாக தீபிகா படுகோன், ஸ்ருதி ஹாஸன் நடிக்கிறார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டது. யாரும் உறுதியாகவில்லை. இப்போது ஹன்சிகா நடிப்பார் என்று தெரிகிறது. ஏற்கெனவே வேலாயுதம் படத்தில் விஜய்யுடன் நடித்திருக்கிறார் ஹன்சிகா.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி சுப்பிரமணியன் கேமராவைக் கையாள்கிறார்.
படம் வரும் செப்டம்பரில் தொடங்குகிறது.