Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரஜினி சார் பேட்டியைப் பார்ப்பவர்கள் கண்கள் குளமாகிவிடும் - விவேக்
சென்னை: ஏப்ரல் 14 அன்று ஜெயாடிவியில் ரஜினி சாரின் பேட்டியைப் பார்ப்பவர் கண்கள் நிச்சயம் கலங்கிவிடும். அந்த அளவு நெகிழ்ச்சியான பேட்டியாக அது வந்துள்ளது என்று நடிகர் விவேக் கூறியுள்ளார்.
தமிழ்ப் புத்தாண்டையொட்டி ஜெயா டிவிக்கு ரஜினிகாந்த் சிறப்புப் பேட்டி அளித்துள்ளார்.
இந்தப் பேட்டியை எடுத்தவர் நடிகர் விவேக். அந்த அனுபவம் குறித்து விவேக் கூறுகையில், 'ரஜினி சாரின் தீவிர ரசிகன் நான். ஒரு சூப்பர் ஸ்டார் என்பதைத் தாண்டி அவரது மனிதநேயத்தை வெளிப்படுத்த ஒரு முயற்சியாக நினைத்து இந்த பேட்டியை எடுத்தேன்.
நிறைய விஷயங்களை இந்த பேட்டியின்போது அவர் பகிர்ந்து கொண்டார். தன் தனிப்பட்ட வாழ்க்கை.. குறிப்பாக தனது இறுதி காலம் பற்றியெல்லாம் கூட அவர் உணர்ச்சி வசப்பட்டுப் பேச, செட்டிலிருந்த அத்தனை பேரும் கலங்கிவிட்டார்கள்.
நான் நிச்சயம் சொல்வேன், அவரது இந்தப் பேட்டியைப் பார்க்கும் அத்தனை பேரின் கண்களும் குளமாகிவிடும்," என்றார்.