Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மாப்பிள்ளை திருடனாகவே இருந்தாலும், திருமணத்தை நிறுத்தும் ஐடியா இல்லை!- இனியா
திருவனந்தபுரம்: வீட்டில் பணம் திருடிய காதலனுடன் நிச்சயமான தன் சகோதரி திருமணத்தை ரத்து செய்யும் எண்ணமில்லை என்று நடிகை இனியா கூறியுள்ளார்.
தமிழில் வாகை சூடவா, மவுன குரு, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இனியா. முன்னணி நடிகையாக உள்ள இவருக்கு சுவாதி என்ற அக்கா இருக்கிறார். இவர் மலையாளத்தில் டி.வி. தொடர்களில் நடித்து வருகிறார். திருவனந்தபுரம் கரமணை அருகே உள்ள மருதூர்க் கடவு என்ற பகுதியில் வசிக்கின்றனர்.
சுவாதிக்கும் அதே ஊரை சேர்ந்த ஷாபின் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தனர். இரு வீட்டு பெற்றோர் சம்மதத்தோடும் சமீபத்தில்தான் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.
திடீரென ஒரு நாள் இரவு சுவாதி திருமணத்துக்காக வாங்கப்பட்ட நகைகளும், ரூ.5 லட்சம் ரொக்கப் பணமும் திருட்டு போனது.
போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கொள்ளையை நடத்தியவர் சுவாதிக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையான ஷாபின்தான் என்பது உறுதியானது. இதனால் இனியா குடும்பத்தினர் அதிர்ச்சியானார்கள். சுவாதிக்கும் ஷாபினுக்கும் நிச்சயமான திருமணம் ரத்தாகும் என கூறப்பட்டது.
ஆனால் அப்படி ஒரு எண்ணம் இல்லை என்று நடிகை இனியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "என் சகோதரி திருமணத்தை நாங்கள் ரத்து செய்யவில்லை. அது மாதிரி எந்த திட்டமும் இல்லை. வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது. இந்த விஷயம் குறித்து என் சகோதரியிடம் நான் பேசவில்லை.
ஷாபின் நல்ல குடும்பத்தை சேர்ந்தவர்தான். அவரது குடும்பம் எங்களை விட வசதியானது. ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு ஷாபின் வந்தார். என் அக்காவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார். என் பெற்றோர் ஷாபின் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோரை சந்தித்து பேசினர். அதன் பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் முடிவானது.
ஷாபினுக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். தவறானவர்களுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதால் இப்படி நடந்து கொண்டாரே என்னமோ.. எங்களைப் பொருத்தவரை உண்மையான குற்றவாளி இன்னும் சிக்கவில்லை என்றுதான் நினைக்கிறோம், என்றார்.