Don't Miss!
- News அண்ணாமலையா? தமிழகத்தில் இந்த பாஜக வேட்பாளர் வென்றால் ரொம்ப மகிழ்ச்சி.. சு.சாமி வைத்த ட்விஸ்ட்
- Sports எல்லை மீறிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்.. பிசிசிஐ தண்டனை அறிவிப்பு.. இனி ஏமாற்று வேலை செய்ய முடியாது
- Lifestyle புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
'ஜிகர்தண்டா'வை அப்படியே வச்சிருந்தா 'ஜில்' போயிருமேப்பா...!!
ஜிகர்தண்டா படம் முடிவடைந்தும் ரிலீஸ் ஆவதற்குக் காரணம் சென்சார் போர்டு வைத்த செக்தான் காரணம் என்று கூறப்படுகிறது.
பீட்சாவை கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள படம் ஜிகர்தண்டா. தீயா வேலை செய்யனும் குமாரு''-க்கு பிறகு சித்தார்த் ஜிகர்தண்டா படத்தை அதிகமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்.
காரணம், இந்த படத்தில் மதுரை மண்வாசனைக்கதையில் முதன்முறையாக அவர் ஆக்சன் கோதாவில் இறங்கியிருக்கிறார். லட்சுமிமேனன் ஜோடி என்பதால் ரசிகர்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
யு/ஏ கொடுத்த சென்சார்
படத்தை முடித்து சென்சார் போர்டுக்கு அனுப்பினால், ரத்தம் வழிந்தோடும் வன்முறைக் காட்சிகள் இருப்பதை காரணம் காட்டி யு/ஏ சான்றிதழ் கொடுத்து விட்டனர்.
விநியோகஸ்தர்கள் முரண்டு
இதையடுத்து அப்படத்தை அதிக தொகை கொடுத்து வாங்க முன்வந்த விநியோகஸ்தர்களோ, டிக்கெட் விலையில் 30 சதவிகிதம் அரசுக்கு சென்று விடும் என்பதால், ஏற்கனவே பேசிய தொகையில் இருந்து ஒரு கணிசமான தொகையை குறைப்பதாக சொல்கிறார்களாம்.
மறுக்கும் இயக்குநர்
இதனால், சென்சார்போர்டு சொல்லும் காட்சிகளை நீக்கினால் யு சான்றிதழ் கிடைக்கும். விநியோகஸ்தர்களும் பேசிய தொகையை தந்து விடுவார்கள். பிரச்னை முடிந்து விடும் என்று தயாரிப்பு தரப்பு கூறினாலும், டைரக்டர் மறுக்கிறாராம்.
அந்த காட்சிகளில்தான் கதையின் ஜீவனே இருக்கிறது. அதை நீக்கினால் படமே இல்லையே,. அப்புறம் எப்படி படம் ஓடும் என்று வாக்குவாதம் செய்கிறாராம்.
ரிலீஸ் தாமதமாகும்
இதன்காரணமாகத்தான் கடந்த 5 மாதங்களாக இதோ அதோ என்று ஜிகர்தண்டா திரைக்கு வருவது தாமதமாகிக்கொண்டு வருகிறதாம். அதனால், இதுவரை காவியத்தலைவன் பட வேலைகளில் பிசியாக இருந்த சித்தார்த், இப்போது இறங்கி வந்து இயக்குநர்-தயாரிப்பாளர் இருவரிடமும் சுமூகமாக பேசி பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும் வேலைகளில் இறங்கியிருக்கிறாராம்.
சீக்கிரம் கொடுத்துடுங்க
ஜிகர்தண்டாவை ஜில்லுன்னு சாப்பிட்டதான் நல்லா இருக்கும் இல்லைன்னா சூடாகி டேஸ்ட் மாறிடும். ரசிகர்களும் ஒத்துக்க மாட்டாங்க. இது எத்தனையோ படங்களுக்கு நடந்திருக்கு. இதை இயக்குநர் புரிந்து கொண்டால் சரி.