Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
'செல்வராகவன், ஏன் இப்படி நீங்களும் கஷ்டப்பட்டு மத்தவங்களையும் கஷ்டப்படுத்தறீங்க?'
கஷ்டப்பட்டால்தான் எந்தப் படமாக இருந்தாலும் பலன் கிடைக்கும், என்று இயக்குநர் செல்வராகவன் கூறினார்.
இரண்டாம் உலகம் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய செல்வராகவனிடம், "நீங்கள் இயக்கும் எல்லா படங்களிலும் நீங்களும் கஷ்டப்பட்டு, நடிகர்-நடிகைகளையும் கஷ்டப்படுத்துகிறீர்கள் என்று புகார்கள் கிளம்புவது வழக்கமாகிவிட்டது. இது தேவைதானா?" என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த செல்வராகவன், "எந்தப் படமாக இருந்தாலும், கஷ்டப்பட்டால்தான் அதற்கான பலன் கிடைக்கும். அது எவ்வளவு பெரிய இயக்குநராக இருந்தாலும் சரி, நடிகர்-நடிகைகளாக இருந்தாலும் சரி, கஷ்டப்பட்டு உழைத்தால்தான் வெற்றி கிடைக்கும்.
இந்த அறைக்குள்ளேயே முழு படத்தையும் எடுத்தால் கூட, நடிகர்-நடிகைகள் கஷ்டப்பட்டுத்தான் ஆகணும்.
எந்த ஒரு வேலையையும் கஷ்டம் என்று நினைக்கக் கூடாது. நான் இயக்குகிற படங்கள் புதுசாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காகத்தான் உழைக்கிறேன். 2000-ல் நான் டைரக்டராக வந்தேன். இந்த பதிமூன்று வருடங்களில், எல்லாமே மாறிப்போச்சு. ரசிகர்களின் ரசனை மாறியிருக்கிறது. அதற்கு தகுந்தாற்போல் படம் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இங்கே தாக்குப் பிடிக்கவே முடியாது..," என்றார்.