இளையராஜாவின் இசையில் உருவான இனிமையான பாடல் ‘பனிவிழும் மலர்வனம்...' இந்த பாடல் வரிகளையே படத்திற்கு தலைப்பாக்கி அதற்கேற்ப குளு குளு இடங்களில் படமாக்கியிருக்கின்றனர் படக்குழுவினர்.
மலர்கள் நிறைந்த வனத்தில் பனி விழுவதை பார்ப்பது அழகுதான். அத்தகைய இயற்கை சூழல் தேக்கடி, குமுளு பகுதிகளில் இந்த திரைப்படம் படமாக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் மென் பனிச் சாரலாய்.... ‘பனி விழும் மலர்வனம்' என்ற தலைப்பைப் போலவே காட்சிகளும் கவித்துவமாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்கின்றனர் படக்குழுவினர்.
அழகே ஆபத்து….
இயற்கையே அழகு! அதுவே ஆபத்து! நிறைந்தது என்ற புதுமையான கருவை அடிப்படையாகக் கொண்டு 'பனி விழும் மலர்வனம்' படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இயற்கை எழிலைக் கண்ணுக்கு விருந்தாக்கி ஒரு சிறந்த படைப்பைக் கொண்டுவர மலைகளின் மேடு பள்ளங்களில் அட்டைகளும் மற்ற இயற்கை உயிரினங்களும் தந்த வலியைப் பொருட்படுத்தாமல், கடினமாக உழைத்திருக்கிறார்களாம் படக் குழுவினர்.































