Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சமுத்திரக்கனி சொன்னதும் சாக்கடையில் விழுந்த ஜெயம் ரவி!
இயக்குநர் சமுத்திரக்கனி சொன்ன அடுத்த நொடியே சாக்கடையில் விழுந்து அனைவரையும் வியக்க வைத்தாராம் நடிகர் ஜெயம் ரவி.
இது நடந்தது சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி - அமலா பால் நடிக்கும் நிமிர்ந்து நில் படத்துக்காக.
இரட்டை வேடங்கள்
‘நிமிர்ந்து நில்' படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் ஜெயமரவியின் கேரக்டர்கள் ரொம்பவே வித்தியாசமானவை என்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி. 'ஒன்று நல்லவன். அடுத்தது இன்னும் நல்லவன்'.
அத்தனை அழகு
வழக்கமான சமூகக் கோபம்தான் படம் என்றாலும், இதில் சமுத்திரக்கனி ஜெயம்ரவியை வித்தியாசப்படுத்தியிருக்கிற அழகு தான் முழுப்படத்திலும் ரசிகர்களை அள்ளிக் கொள்ளும் என்கிறார்கள் நிமிர்ந்து நில் யூனிட்டைச் சேர்ந்தவர்கள்.
விறுவிறு திரைக்கதை
சாந்த சொரூபி. ஒழுக்கமானவன். குருகுலத்தில் படித்தவன். இப்படிப்பட்ட இளைஞன் சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை ஒரு கட்டத்தில் தட்டிக் கேட்கத் தொடங்குகிறான். அதன்பிறகே அதுவரை வளைந்து கிடந்த பல முதுகுகள் நிமிர்ந்து நிற்கின்றன என்பதை விறுப்பான திரைக்கதையால் மெருகேற்றியிருக்கிறாராம் சமுத்திரக்கனி.
பாராட்டு
சமுத்திரக்கனி வியந்து பாராட்டுவது ஜெயம் ரவியை. ஒரு காட்சியில் ‘சாக்கடையில் விழு' என்று சொல்லி முடிப்பதற்குள் விழுந்து அதிர வைத்திருக்கிறார் ஜெயம்ரவி.
அமலா பால் அதிர்ச்சி
நாயகி அமலாபால்கூட சற்றே எட்டத்தில் நின்று மூக்கை பிடித்தபடி ‘‘இப்படி பாதுகாப்பில்லாமல் விழலாமா ரவி?'' என்று அக்கறையாய் கேட்க, அதற்கு ஜெயம் ரவியின் பதில் என்ன தெரியுமா? ‘‘இயக்குநர் சொன்னப்புறம் யோசிச்சிக்கிட்டிருந்தா தப்பாயிடும்!''
எல்லோருக்கும் பிடிச்ச நடிகர்
"ஜெயம் ரவியின் இந்த டெடிகேஷன்தான் அவருக்கென்று ஒரு நல்ல இடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுத் தந்திருக்கு. அவர் இன்னும் பெரிய உயரங்களைத் தொடுவார்," என்கிறார் சமுத்திரக்கனி.
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!