விஸ்வரூபம் பட விவகாரத்தையடுத்து இணையதள உலகிலும், சமூக வலைத் தளங்களிலும் நடிகர் கமல்ஹாசன் தான் இன்று மிக அதிகப்படியாக பேசப்பட்டுள்ளார்.
விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து தமிழகம், புதுவை உள்ளிட்ட சில இடங்களில் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் படம் ரிலீஸ் ஆகி விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இணையதளங்களிலும், ஃபேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் விஸ்வரூபம் பற்றியும் கமல் பற்றியும்தான் இன்று பெரும்பாலான கருத்துக்கள் பகிரப்படுகின்றன.
கமல் முன்னிலை
இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத கலைஞனான கமல்ஹாசனின் படைப்புச் சுதந்திரத்தை பறிப்பது சரியல்ல என்கிற ரீதியில் டிவிட்டரில் நூற்றுக்கணக்கான குறும் பதிவுகள் இடப்படுகின்றன. இதற்கு எதிரான அவர் எப்படி ஒரு மதத்தினரை புண்படுத்தலாம் என்ற பதிவுகளும் ஏற்றப்பட்டு வருகின்றன. டிவிட்டர் டிரெண்டில் கமல்ஹாசன் தான் இன்று முன்னிலையில் உள்ளார்.






















