twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வழிதவறிப் போகாதவர்கள் பாலுமகேந்திராவும் மகேந்திரனும்!- இளையராஜா

    By Shankar
    |

    சென்னை: தமிழ் சினிமாவில் வழி தவறிப் போகாத இயக்குநர்கள் பாலுமகேந்திராவும் மகேந்திரனும் என்று பாராட்டினார் இளையராஜா.

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு மகேந்திரன் - இளையராஜா இணையும் புதிய படத்தின் அறிமுக விழா பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது.

    Balu Mahendira, Mahendiran and Ilayaraaja

    நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, "இயக்குனர் பாலு மகேந்திராவின் மறைவினால் தான் இந்த சந்திப்பு தாமதமானது. சிறந்த படைப்பாளிகளாக திகழ்ந்த இயக்குனர்களில் பலர், தங்கள் படைப்புகளில் சமரசங்கள் செய்துகொண்டு வழித்தவறி போய்விட்டனர். நான் சொல்வது தனிப்பட்ட முறையில் அல்ல.

    சினிமா படைப்புகளை பொருத்தவரை அவர்கள் புகழ், மார்கெட் என பலவும் ஏறியிருக்கலாம். ஆனால், எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல் வழித்தவறாமல் சிறந்த படைப்புகளை கொடுத்தவர் பாலுமகேந்திரா. அவர் மறைவுக்குப் பிறகுதான் அவருக்கான இடம் என்னவென்பது பலருக்குப் புரிந்திருக்கிறது.

    அந்த வகையில் இயக்குனர் மகேந்திரனும் இதுவரை எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் தனக்கென தனி இடத்தை தக்கவைத்துள்ளவர். மகேந்திரன் சொன்ன கதை எனக்கு பிடித்திருந்தது. இந்தப் படத்தில் அவருடன் இணைவது மகிழ்ச்சியாக உள்ளது," என்றார்.

    English summary
    Maestro Ilayaraaja says that directors like Balu Mahendira and Mahendiran never compromises in their creativity.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X