twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லிங்கா படப்பிடிப்புத் தளத்தில் பிறந்த நாள் கொண்டாடிய கேஎஸ் ரவிக்குமார்.. ரஜினி கேக் ஊட்டினார்!

    By Shankar
    |

    மைசூர்: இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தன் பிறந்த நாளை மைசூரில் லிங்கா படப்பிடிப்பில் ரஜினியுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார்.

    ரவிக்குமாருக்கு ரஜினி பிறந்த நாள் கேக் ஊட்டி வாழ்த்துச் சொன்னார்.

    கோச்சடையானுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் லிங்கா. விடுதலைக்கு முந்தைய இந்தியாவை கதைக் களமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மைசூரில் தொடர்ந்து நடந்து வருகிறது.

    நேற்று இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரின் பிறந்த நாள். ஆனால் படப்பிடிப்பு தொடர்ந்தது. நேற்று மாலை படப்பிடிப்பு முடிந்ததும், பெரிய கேக் வரவழைத்து, கேஎஸ் ரவிக்குமாரை வெட்டச் சொல்லி பிறந்த நாள் கொண்டாட வைத்தார் ரஜினி.

    படக் குழுவினர் பிறந்த நாள் பாடல் பாட கே எஸ் ரவிக்குமார் கேக் வெட்டினார். முதல் துண்டை எடுத்து கேஎஸ் ரவிக்குமாருக்கு ஊட்டினார் ரஜினி.

    இந்த பிறந்த நாளை தன்னுடைய வாழ்க்கையின் மறக்க முடியாத நாள் என்று குறிப்பிட்டுள்ளார் கே எஸ் ரவிக்குமார்.

    அவர் இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:

    இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத பிறந்த நாள். நம்மை விரும்பும், அக்கறையாகப் பார்த்துக் கொள்ளும் அன்பு உள்ளங்கள் இல்லாமல் பிறந்த நாள் முழுமையடையாது. இந்தப் பிறந்த நாளை மறக்க முடியாத நாளாக்கிய லிங்கா குழுவினருக்கு நன்றி.

    இந்த நாளை என் வாழ்வின் மிகப் பெரிய நாளாக்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நன்றி. ராக்லைன் வெங்கடேஷுடன் இணைந்து பணியாற்றுவதில் மிக்க மகிழ்ச்சி," என்று குறிப்பிட்டுள்ளார் கேஎஸ் ரவிக்குமார்.

    English summary
    Director KS Ravikumar celebrated his birthday with Superstar Rajini at Lingaa shooting spot.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X