Don't Miss!
- News பீகாரில் தொகுதி உடன்பாடு ஓவர்.. பாஜகவுக்கு சவால் கொடுக்க பகாக் பிளான் உடன் இறங்கும் இந்தியா கூட்டணி!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேரும் பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு பேட்டிங் இறங்கிட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான RR
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஜீ தமிழில் காயத்ரி… ஏழைப்பெண்ணின் தன்னம்பிக்கை கதை!
திங்கள் முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 'காயத்ரி' எனும் புத்தம் புதிய தொடர் திங்கட்கிழமை முதல் ஒளிபரப்பாகி வருகிறது.
உயர்ந்த லட்சியங்களும், நல்ல எண்ணங்களும், போராட்ட குணமும் உள்ள ஒரு ஏழைப் பெண்ணின் கதை இது.இந்தத் தொடர் முழுக்க முழுக்க பெண்களுக்குத் தன்னம்பிக்கையூட்டும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாம்.
அவளுக்கு அவமானங்கள் ஏற்படும்போதெல்லாம் 'நான் ஏழையாகப் பிறந்தது என் குற்றமல்ல... ஆனால் ஏழையாகவே இறந்து போனால் அது என் குற்றம்...' எனும் மந்திரத்தை உச்சரிப்பவள்.
காயத்ரியின் வாழ்க்கை
சமூக அங்கீகாரம் இல்லாத ஒரு இட்லிக்கடைத் தாய்க்குப் பிறந்தவள் காயத்ரி. சூழ்நிலையினாலும், வறுமையினாலும் தான் விரும்பிய பெண்ணை விட்டுவிட்டு, குடும்ப நிர்ப்பந்தத்தினால் ஒரு பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டவர் காயத்ரியின் தந்தை.
தாய்க்கு அங்கீகாரம்
அந்தப் பணக் காரப் பெண் மிகவும் திமிர் பிடித்தவள். கொலை செய்வதற்குக்கூட அஞ்சாதவள். ஆனால், காயத்ரி அவளது தந்தை மூலம் தாயின் கழுத்தில் ஒரு தாலியைக் கட்ட வைத்து அம்மாவிற்கு சமூகத்தில் அங்கீகாரம் பெற்றுத்தர ஆசைப்படுகிறாள்.
சித்தியின் சூழ்ச்சி
காயத்ரியின் விருப்பம் நிறைவேறியதா? இதை அறிந்த அந்த பணக்காரத் திமிர் பிடித்த சித்தி அதிபயங்கர சூழ்ச்சிகளை உருவாக்குகிறாள்.
காயத்ரியின் வெற்றி
அந்த சூழ்ச்சியில் காயத்ரி வீழ்ந்தாளா...? வென்றாளா...? என்பதை விறுவிறுப்பான திரைக்கதை அம்சங்களுடன் காட்சிப்படுத்துகிறது தொடர்.
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் இந்த தொடரை ஏ.பி.ராஜேந்திரன் இயக்குகிறார்.